<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b0%e0%af%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/இந்தியப்-பிரதமர்-நரேந்தி/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Wed, 21 Jan 2026 10:08:07 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/இந்தியப்-பிரதமர்-நரேந்தி/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>‘புத்த பெருமானின் புனித சின்னங்கள் தரிசனம்’</title>
		<link>https://oruvan.com/view-of-the-sacred-relics-of-lord-buddha/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Wed, 21 Jan 2026 10:07:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[‘View of the sacred relics of Lord Buddha’]]></category>
		<category><![CDATA[இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=43522</guid>

					<description><![CDATA[<p>இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டின் கீழ் இந்திய அரசாங்கத்தின் முழு அனுசரணையுடன் இலங்கைக்குக் கொண்டுவரப்படவுள்ள “ புத்த பெருமானின் புனித சின்னங்கள்” தரிசனம் பெப்ரவரி 04 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை ஏழு நாட்கள் கொழும்பு, ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையில் நடைபெறும். அதன், ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுலகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/view-of-the-sacred-relics-of-lord-buddha/">‘புத்த பெருமானின் புனித சின்னங்கள் தரிசனம்’</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டின் கீழ் இந்திய அரசாங்கத்தின் முழு அனுசரணையுடன் இலங்கைக்குக் கொண்டுவரப்படவுள்ள “ புத்த பெருமானின் புனித சின்னங்கள்” தரிசனம் பெப்ரவரி 04 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை ஏழு நாட்கள் கொழும்பு, ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையில் நடைபெறும்.</p>
<p>அதன், ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுலகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.</p>
<p>இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த இடமான குஜராத்தில் 1960களில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட புத்த பெருமானின் உடல் சார்ந்த புனித சின்னங்கள் இதுவரை இந்தியாவுக்கு வெளியே கொண்டு செல்லப்படவில்லை என்பதுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அண்மைய இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் விளைவாக, இந்த புனித சின்னங்களை தரிசிக்கும் அரிய வாய்ப்பு இந்த நாட்டு மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.</p>
<p>புனித சின்னங்களை பெப்ரவரி 04 ஆம் திகதி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதுடன், அன்றிலிருந்து, ஹுனுபிட்டி கங்காராம விஹாரையில் பொது மக்களுக்கு புனித சின்னங்களை வழிபடும் வாய்ப்புக் கிடைக்கும்.</p>
<p>பெப்ரவரி 04 ஆம் திகதி இந்தியாவிலிருந்து புனித சின்னங்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டதிலிருந்து அவை இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு செல்லப்படும் வரை தேவையான வசதிகள், ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒதுக்கப்பட்ட பணிகள் மற்றும் அவை தொடர்பான திட்டங்கள் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.</p>
<p>புனித சின்னங்களை வழிபடுவதற்காக ஏராளமான பொதுமக்கள் கொழும்புக்கு வருகை தருவதால் அவர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும் என்று இங்கு கருத்துத் தெரிவித்த கங்காராம விகாரையின் விகாராதிபதி வண. கிரிந்தே அஸ்ஸஜி நாயக்க தேரர் தெரிவித்தார்.</p>
<p>புனித சின்னங்களை வழிபடுவதற்காக கங்காராம விகாரை வளாகம் எவ்வாறு தயார்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்தும் தேரர் இதன்போது கருத்துத் தெரிவித்தார்.</p>
<p>இது, இலங்கை மக்களுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தர்ப்பம் என்றும், நாட்டில் பௌத்த மறுமலர்ச்சியை உருவாக்கும் திட்டத்தில் ஒரு தனித்துவமான வாய்ப்பு என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால இதன்போது தெரிவித்தார்.</p>
<p>கங்காராம விகாரையின் வண. கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர், கலாநிதி ஹினிதும சுனில் செனவி, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க, மேல்மாகாண ஆளுநர் ஹனீஃப் யூசுப், கொழும்பு மேயர் வ்ராய் கெலி பல்தசார், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன உட்பட துறைசார் அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்கள், அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டார, முப்படைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட ஏனைய பாதுகாப்புப் பிரிவுத் தலைவர்கள் மற்றும் இந்த நிகழ்வுக்கு அனுசரணை வழங்கும் தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/view-of-the-sacred-relics-of-lord-buddha/">‘புத்த பெருமானின் புனித சின்னங்கள் தரிசனம்’</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று இலங்கை வருகிறார்</title>
		<link>https://oruvan.com/indian-prime-minister-narendra-modi-is-arriving-in-sri-lanka-today/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Apr 2025 00:30:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=16788</guid>

					<description><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (04) மாலை இலங்கைக்கு வர உள்ளார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான &#8220;நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு&#8221; (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில்,இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்த விஜயத்தில் இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட உயர்மட்ட இந்தியக் குழுவும் இணைய [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/indian-prime-minister-narendra-modi-is-arriving-in-sri-lanka-today/">இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று இலங்கை வருகிறார்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (04) மாலை இலங்கைக்கு வர உள்ளார்.</p>
<p>இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான &#8220;நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு&#8221; (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில்,இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்த விஜயத்தில் இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட உயர்மட்ட இந்தியக் குழுவும் இணைய உள்ளது.</p>
<p>இந்தியப் பிரதமருக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு ஏப்ரல் 5 ஆம் திகதி காலை கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெறும்.</p>
<p>இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட உள்ளதோடு இருதரப்பு பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பிலும் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார்.</p>
<p>இதன்போது எரிசக்தி, டிஜிட்டல் மயமாக்கல், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் இந்தியாவுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் ஆகியவை பரிமாறிக்கொள்ளப்படும்.</p>
<p>இந்திய ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத் திட்டம் ஆரம்பிப்பு, வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய 5,000 மெட்ரிக் தொன் தம்புள்ள களஞ்சிய வளாகத்தின் நிர்மானம் (குளிர்பதன திட்டம்), 5,000 மதத் தலங்களின் கூரைகளில் சூரிய மின்களங்களை நிறுவும் திட்டம் என்பன இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒன்லைன் ஊடாக ஆரம்பித்து வைக்க உள்ளார்.</p>
<p>அதேபோல், இந்தியப் பிரதமர் அனுராதபுரம் ஸ்ரீ மகா போதிக்கு வழிபாடு மேற்கொள்ள இருப்பதுடன் இந்திய அரசாங்கத்தின் அன்பளிப்புடன் நிறுவப்பட்ட மஹவ-அனுராதபுரம் ரயில் சமிக்ஞை கட்டமைப்பு மற்றும் மறுசீரமைக்கப்பட்ட ரயில் பாதையை திறந்து வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.</p>
<p>ஏப்ரல் 06 ஆம் திகதி பிற்பகல் இலங்கைக்கான சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துக்கொண்டு இந்தியப் பிரதமர் நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்வார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/indian-prime-minister-narendra-modi-is-arriving-in-sri-lanka-today/">இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று இலங்கை வருகிறார்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மோடியின் வருகையை முன்னிட்டு கொழும்பில் வரலாறு காணாத பாதுகாப்பு &#8211; விசேட குழுவும் இந்தியாவிலிருந்து வருகை</title>
		<link>https://oruvan.com/unprecedented-security-in-colombo-ahead-of-modis-visit-special-team-arrives-from-india/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Wed, 02 Apr 2025 07:48:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=16636</guid>

					<description><![CDATA[<p>இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 4ஆம் திகதி இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு வருகைத்தர உள்ளார். இந்த நிலையில் அவரது வருகைக்கு முன்னதாக இலங்கை பாதுகாப்பு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற இந்தியாவிலிருந்து விசேட பாதுகாப்பு குழுவொன்று கொழும்பை வந்தடைந்துள்ளதாக புதுடில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடி  எதிர்வரும் 4ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை இலங்கைக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். மோடியின் வருகையின் போது கொழும்பு மற்றும் அனுராதபுரத்தில் சிறப்பு பாதுகாப்பு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/unprecedented-security-in-colombo-ahead-of-modis-visit-special-team-arrives-from-india/">மோடியின் வருகையை முன்னிட்டு கொழும்பில் வரலாறு காணாத பாதுகாப்பு &#8211; விசேட குழுவும் இந்தியாவிலிருந்து வருகை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 4ஆம் திகதி இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு வருகைத்தர உள்ளார். இந்த நிலையில் அவரது வருகைக்கு முன்னதாக இலங்கை பாதுகாப்பு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற இந்தியாவிலிருந்து விசேட பாதுகாப்பு குழுவொன்று கொழும்பை வந்தடைந்துள்ளதாக புதுடில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>பிரதமர் மோடி  எதிர்வரும் 4ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை இலங்கைக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.</p>
<p>மோடியின் வருகையின் போது கொழும்பு மற்றும் அனுராதபுரத்தில் சிறப்பு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.</p>
<p>வெள்ளிக்கிழமை மாலை கட்டுநாயக்காவில் சர்வதேச விமான நிலையத்தில் மோடி தரையிறங்கியது முதல் 6ஆம் திகதி அவர் செல்லும் வரை கொழும்பு உட்பட பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.</p>
<p>இந்தியப் பிரதமருடன் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுச் செயலாளர் மற்றும் மூத்த இந்திய அதிகாரிகள் என பலரும் கலந்து கொள்வார்கள்.</p>
<p>இந்தியப் பிரதமருடன் வெளியுறவு அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுச் செயலாளர் மற்றும் பிற மூத்த இந்திய அதிகாரிகள் வருகைதர உள்ளனர்.</p>
<p>இந்தப் பயணத்தின் போது, ​​பிரதமர் மோடி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரியா ஆகியோருடன் இருதரப்பு பேச்சுக்களை நடத்த உள்ளார்.</p>
<p>மேலும், பிரதமர் மோடி, அனுராதபுரத்தில் புனித ஸ்ரீ மகா போதியில் வழிபாடு நடத்தவும், இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியில் இலங்கையில் முன்னெடுக்கப்படும் பல திட்டங்களைத் தொடங்கி வைக்கவும் உள்ளார்.</p>
<p>மேல் மாகாண மூத்த டிஐஜி சஞ்சீவ தர்மரத்னே, மோடியின் கொழும்பு பயணத்துக்கான பாதுகாப்புகளை கண்காணிக்க உள்ளார்.  ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவு மற்றும் இந்திய பாதுகாப்புக் குழுவும் ஒருங்கிணைந்து இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>பிரதமர் மோடியும் அவரது குழுவினரும் விமான நிலையத்தில் இருந்து கொழும்புக்கு பயணிக்கும்போதும், கொழும்பு மற்றும் அனுராதபுரத்தில் பயணிக்கும் போதும் பல வீதிகள்  அவ்வப்போது மூடப்படும்.</p>
<p>கொழும்பு மற்றும் அனுராதபுரத்தில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளது. பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாட்டிற்காக அதிகளவான பொலிஸார் மற்றும் சிறப்புப் படையினர் பயன்படுத்தப்பட உள்ளனர்.</p>
<p>இதேவேளை, மோடியின் பாதுகாக்கான ஒத்திகை இன்று (2) நடத்தப்படுவதாக அரசதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.</p>
<p>The post <a href="https://oruvan.com/unprecedented-security-in-colombo-ahead-of-modis-visit-special-team-arrives-from-india/">மோடியின் வருகையை முன்னிட்டு கொழும்பில் வரலாறு காணாத பாதுகாப்பு &#8211; விசேட குழுவும் இந்தியாவிலிருந்து வருகை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மோடியைச் சந்திக்கும் தமிழ்க் கட்சிகளின் 7 பேர் கொண்ட குழு</title>
		<link>https://oruvan.com/7-member-delegation-of-tamil-parties-to-meet-modi/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Tue, 01 Apr 2025 05:24:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=16458</guid>

					<description><![CDATA[<p>இலங்கை வரும் இந்தியப் பிரதமரை இலங்கையின் தமிழ்க் கட்சிகள் சார்பில் 7 பேர் சந்தித்துக் கலந்துரையாட உள்ளனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 4 ஆம் திகதி மாலை கொழும்புக்கு வருகை தந்து 6 ஆம் திகதி காலை இந்தியா திரும்புகின்றார். இதன்போது அவரைச் சந்திப்பதற்குச் சந்தர்ப்பம் கோரி பல தமிழ்த் தரப்புக்களும் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தை நாடியுள்ளனர். இதற்கமைய தமிழர் தரப்பில் 7 பிரதிநிதிகள், மோடியைச் சந்திப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இலங்கைத் தமிழரசுக் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/7-member-delegation-of-tamil-parties-to-meet-modi/">மோடியைச் சந்திக்கும் தமிழ்க் கட்சிகளின் 7 பேர் கொண்ட குழு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கை வரும் இந்தியப் பிரதமரை இலங்கையின் தமிழ்க் கட்சிகள் சார்பில் 7 பேர் சந்தித்துக் கலந்துரையாட உள்ளனர்.</p>
<p>இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 4 ஆம் திகதி மாலை கொழும்புக்கு வருகை தந்து 6 ஆம் திகதி காலை இந்தியா திரும்புகின்றார். இதன்போது அவரைச் சந்திப்பதற்குச் சந்தர்ப்பம் கோரி பல தமிழ்த் தரப்புக்களும் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தை நாடியுள்ளனர்.</p>
<p>இதற்கமைய தமிழர் தரப்பில் 7 பிரதிநிதிகள், மோடியைச் சந்திப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>இதில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் 4 பேரும், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)  சார்பில் ஒருவரும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி் சார்பில் இருவருமாக இந்த 7 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>இதற்கமைய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் சி.வி.கே.சிவஞானம், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரும், அகில இலங்கை தமிழக காங்கிரஸ் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி் சார்பில் செல்வம் அடைக்கலநாதனுடன் பங்காளிக் கட்சித் தலைவர்களில் ஒருவருமாக இந்த 7  பேரும் மோடியைச் சந்திக்கவுள்ளனர்.</p>
<p>இந்தச் சந்திப்பு கொழும்பில் எதிர்வரும் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/7-member-delegation-of-tamil-parties-to-meet-modi/">மோடியைச் சந்திக்கும் தமிழ்க் கட்சிகளின் 7 பேர் கொண்ட குழு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
