<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஆஸ்திரேலியா Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%e0%ae%86%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/ஆஸ்திரேலியா/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Thu, 02 Apr 2026 06:02:14 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>ஆஸ்திரேலியா Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/ஆஸ்திரேலியா/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>போர் நிறுத்தத்துக்கு ஆஸ்திரேலியா அழைப்பு</title>
		<link>https://oruvan.com/australia-calls-for-ceasefire/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Apr 2026 05:02:04 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆஸ்திரேலியா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=47826</guid>

					<description><![CDATA[<p>ஈரான் மீதான போரில் அமெரிக்காவின் முக்கிய இலக்குகள் பெரும்பாலும் எட்டப்பட்டுவிட்டதாக டிரம்ப் கூறியுள்ள நிலையில், ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் தற்போதைய பதற்றத்தைத் தணிக்கக் கோரியுள்ளார். இந்தப் போர் மேலும் நீடித்தால் உலகப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று அவர் கவலை தெரிவித்துள்ளார். நிர்ணயிக்கப்பட்ட குறிக்கோள்கள் அடைந்துவிட்ட நிலையில், இந்த ராணுவ நடவடிக்கையின் இறுதி முடிவு என்ன என்பது இன்னும் தெளிவாகவில்லை என்று அல்பானிஸ் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, வன்முறையைக் குறைத்து அமைதியை நிலைநாட்ட வேண்டிய தருணம் இதுவென [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/australia-calls-for-ceasefire/">போர் நிறுத்தத்துக்கு ஆஸ்திரேலியா அழைப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஈரான் மீதான போரில் அமெரிக்காவின் முக்கிய இலக்குகள் பெரும்பாலும் எட்டப்பட்டுவிட்டதாக டிரம்ப் கூறியுள்ள நிலையில், ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் தற்போதைய பதற்றத்தைத் தணிக்கக் கோரியுள்ளார்.</p>
<p>இந்தப் போர் மேலும் நீடித்தால் உலகப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.</p>
<p>நிர்ணயிக்கப்பட்ட குறிக்கோள்கள் அடைந்துவிட்ட நிலையில், இந்த ராணுவ நடவடிக்கையின் இறுதி முடிவு என்ன என்பது இன்னும் தெளிவாகவில்லை என்று அல்பானிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>எனவே, வன்முறையைக் குறைத்து அமைதியை நிலைநாட்ட வேண்டிய தருணம் இதுவென அவர் வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>இந்தப் போரைத் தொடர்வதால் இனிமேல் சாதிக்க வேண்டியது ஏதுமில்லை என்பதே அவரது முக்கியக் கருத்தாக உள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/australia-calls-for-ceasefire/">போர் நிறுத்தத்துக்கு ஆஸ்திரேலியா அழைப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஆஸ்திரேலியாவில் பிரித்தானிய பிரஜைக்கு சிறைத்தண்டனை</title>
		<link>https://oruvan.com/british-citizen-sentenced-to-prison-in-australia/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Fri, 12 Dec 2025 12:42:19 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆஸ்திரேலியா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=40517</guid>

					<description><![CDATA[<p>ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில், மதுபோதையில் மின்சார ஸ்கூட்டரை ஓட்டி, 51 வயதான இரு குழந்தைகளின் தந்தையை விபத்தில் கொன்ற 25 வயதுடைய பிரித்தானியப் பயணி Alicia Kemp என்பவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் நான்கு வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்தக் குற்றத்தைச் செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார். வழங்கப்பட்ட தண்டனையில், இரண்டு வருடங்கள் பிணை இல்லாமல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் மேற்கு ஆஸ்திரேலியாவில் வாடகை ஸ்கூட்டர் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வழிவகுத்ததுடன், [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/british-citizen-sentenced-to-prison-in-australia/">ஆஸ்திரேலியாவில் பிரித்தானிய பிரஜைக்கு சிறைத்தண்டனை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில், மதுபோதையில் மின்சார ஸ்கூட்டரை ஓட்டி, 51 வயதான இரு குழந்தைகளின் தந்தையை விபத்தில் கொன்ற 25 வயதுடைய பிரித்தானியப் பயணி Alicia Kemp என்பவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் நான்கு வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.</p>
<p>இந்தக் குற்றத்தைச் செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார். வழங்கப்பட்ட தண்டனையில், இரண்டு வருடங்கள் பிணை இல்லாமல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்தச் சம்பவம் மேற்கு ஆஸ்திரேலியாவில் வாடகை ஸ்கூட்டர் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வழிவகுத்ததுடன், மின்சார ஸ்கூட்டர்களின் பாதுகாப்பு குறித்த தேசிய விவாதத்தையும் தூண்டியுள்ளது</p>
<p>The post <a href="https://oruvan.com/british-citizen-sentenced-to-prison-in-australia/">ஆஸ்திரேலியாவில் பிரித்தானிய பிரஜைக்கு சிறைத்தண்டனை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஆயுதங்களை ஒப்படையுங்கள்: ஹமாஸ் அமைப்புக்கு ஆஸ்திரேலியா அழைப்பு</title>
		<link>https://oruvan.com/australia-calls-on-hamas-to-hand-over-weapons/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Sep 2025 12:30:10 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆஸ்திரேலியா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=34004</guid>

					<description><![CDATA[<p>இஸ்ரேல் மற்றும் ஹ​மாஸ் அமைப்புக்கு இடையிலான போரை நிறுத்தும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் முன்வைக்கப்பட்டுள்ள 21 அம்ச அமை​தித் திட்டத்தை ஆஸ்திரேலியா வரவேற்றுள்ளது. மேற்படி திட்டத்தை ஆதரித்து பிரதமர் அந்தோனி அல்பானீஸியால் இன்று விசேட அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. ” போர்நிறுத்தம், பணயக்கைதிகள் விடுதலை மற்றும் காசாவிற்கு உதவி வழங்குதல் என்பன தொடர்பில் சர்வதேச சமூகத்துடன் இணைந்து ஆஸ்திரேலியா ஆதரவளித்துவருகின்றது. காசாவின் எதிர்கால நிர்வாகத்தில் ஹமாஸ் அமைப்புக்கு எந்தப் பங்கையும் மறுப்பதற்கான திட்டத்தின் உறுதிப்பாட்டை ஆஸ்திரேலியா [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/australia-calls-on-hamas-to-hand-over-weapons/">ஆயுதங்களை ஒப்படையுங்கள்: ஹமாஸ் அமைப்புக்கு ஆஸ்திரேலியா அழைப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இஸ்ரேல் மற்றும் ஹ​மாஸ் அமைப்புக்கு இடையிலான போரை நிறுத்தும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் முன்வைக்கப்பட்டுள்ள 21 அம்ச அமை​தித் திட்டத்தை ஆஸ்திரேலியா வரவேற்றுள்ளது.</p>
<p>மேற்படி திட்டத்தை ஆதரித்து பிரதமர் அந்தோனி அல்பானீஸியால் இன்று விசேட அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.</p>
<p>” போர்நிறுத்தம், பணயக்கைதிகள் விடுதலை மற்றும் காசாவிற்கு உதவி வழங்குதல் என்பன தொடர்பில் சர்வதேச சமூகத்துடன் இணைந்து ஆஸ்திரேலியா ஆதரவளித்துவருகின்றது.</p>
<p>காசாவின் எதிர்கால நிர்வாகத்தில் ஹமாஸ் அமைப்புக்கு எந்தப் பங்கையும் மறுப்பதற்கான திட்டத்தின் உறுதிப்பாட்டை ஆஸ்திரேலியா உறுதிப்படுத்துகின்றது.</p>
<p>மேலும் இந்தத் திட்டத்திற்கு உடன்படுமாறும், ஆயுதங்களைக் களையுமாறும், மீதமுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்குமாறும் ஹமாஸ் அமைப்புக்கு அழைப்பு விடுகின்றோம். – எனவும் அல்பானீஸி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>” பாலஸ்தீன ஆணையம் காசாவை மீண்டும் கட்டுப்பாட்டில் எடுப்பதையும் நாங்கள் பாராட்டுகிறோம். பாலஸ்தீனியர்களை இணைப்பது மற்றும் கட்டாயமாக இடம்பெயர்வதை ஜனாதிபதி டிரம்பின் திட்டம் தெளிவாக நிராகரிப்பதை பிரதிபலிக்கிறது.” – எனவும் அல்பானீஸி சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/australia-calls-on-hamas-to-hand-over-weapons/">ஆயுதங்களை ஒப்படையுங்கள்: ஹமாஸ் அமைப்புக்கு ஆஸ்திரேலியா அழைப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கையில் மிக மோசமான மனித உரிமை மீறல்கள்: சர்வதேசத்திடம் யஸ்மின் சூகா வலியுறுத்து</title>
		<link>https://oruvan.com/former-state-minister-lohan-ratwatte-arrested-2/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Sat, 07 Dec 2024 02:12:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆஸ்திரேலியா]]></category>
		<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[மனித உரிமை மீறல்கள்]]></category>
		<category><![CDATA[யஸ்மின் சூகா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=1514</guid>

					<description><![CDATA[<p>இலங்கையில் மனித குலத்துக்கு எதிரான மிக மோசமான மீறல் குற்றங்களிலும், ஊழல் மோசடிகளிலும் ஈடுபட்ட அரச மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு எதிராகத் தடைகளையும், நுழைவு அனுமதித் தடையையும் விதிக்குமாறு வலியுறுத்தி அதனுடன் தொடர்புடைய 60 இற்கும் மேற்பட்ட கோரிக்கைகளையும், ஆவணங்களையும் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் அரசுகளுக்கும், ஐ.நா. சபைக்கும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டம் அனுப்பி வைத்திருக்கின்றது. ஜொஹனஸ்பேர்க்கை தளமாகக் கொண்டு யஸ்மின் சூக்கா தலைமையில் இயங்கி வரும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/former-state-minister-lohan-ratwatte-arrested-2/">இலங்கையில் மிக மோசமான மனித உரிமை மீறல்கள்: சர்வதேசத்திடம் யஸ்மின் சூகா வலியுறுத்து</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையில் மனித குலத்துக்கு எதிரான மிக மோசமான மீறல் குற்றங்களிலும், ஊழல் மோசடிகளிலும் ஈடுபட்ட அரச மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு எதிராகத் தடைகளையும், நுழைவு அனுமதித் தடையையும் விதிக்குமாறு வலியுறுத்தி அதனுடன் தொடர்புடைய 60 இற்கும் மேற்பட்ட கோரிக்கைகளையும், ஆவணங்களையும் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் அரசுகளுக்கும், ஐ.நா. சபைக்கும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டம் அனுப்பி வைத்திருக்கின்றது.</p>
<p>ஜொஹனஸ்பேர்க்கை தளமாகக் கொண்டு யஸ்மின் சூக்கா தலைமையில் இயங்கி வரும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டமானது இலங்கையின் அரச மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு எதிரான தடைகள் மற்றும் விஸா அனுமதி தடைகள் தொடர்பான 60 இற்கும் மேற்பட்ட கோரிக்கைகளைச் சமர்ப்பித்திருப்பதுடன் உலகளாவிய சட்ட வரம்பெல்லையின் பிரகாரம் வழக்குப் பதிவுகளையும் கோரியிருக்கின்றது.</p>
<p>மனித உரிமைகள் தினத்தையொட்டி (எதிர்வரும் 10 ஆம் திகதி) தயாரிக்கப்பட்டிருக்கும் இக்கோரிக்கைகள் மற்றும் ஆவணங்கள் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் அரசுகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.</p>
<p>இவை இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ், புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், நீதிபதிகள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினருடன் தொடர்புடைய கடந்த கால மனித உரிமை மீறல்கள் மற்றும் குறிப்பிடத்தக்க ஊழல், மோசடிகள் என்பன பற்றியவையாக இருக்கின்றன.</p>
<p>உள்நாட்டுப் போரின்போதும், அதற்குப் பின்னருமான காலப்பகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத படுகொலைகள், வலிந்து காணாமல் ஆக்கப்படல்கள், பலவந்தமான கைதுகள் மற்றும் தடுத்து வைப்புக்கள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட மனித குலத்துக்கு எதிரான மிக மோசமான மனித உரிமை மீறல்களும், நாட்டின் அரச கட்டமைப்புக்களில் ஆழமாக வேரூன்றியிருக்கும் பாரிய ஊழல்களும் இந்தக் குற்றங்களில் அடங்குகின்றன.</p>
<p>அதுமாத்திரமன்றி இந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதில் தடைகளை ஏற்படுத்தும் வகையிலான முறையற்ற தலையீடுகள், அதிகாரத் துஷ்பிரயோகங்கள் என்பனவும் இதில் உள்வாங்கப்பட்டுள்ளன.</p>
<p>இந்த நடவடிக்கை தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா,</p>
<p>&#8220;கடந்த கால மீறல்கள் தொடர்பில் இற்றைவரை பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படாத நிலையில், கடந்த கால மற்றும் சமகால குற்றங்களை ஆவணப்படுத்தி, அவற்றுக்கான சான்றுகளைப் பகுப்பாய்வு செய்து, உண்மையைக் கண்டறிவதற்கு ஏதுவான சகல வழிமுறைகளையும் உரியவாறு பயன்படுத்திக்கொள்வது இன்றியமையாததாகும்.</p>
<p>அதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் இலங்கை அதிகாரிகளுக்கு எதிராகப் பிரிட்டனின் தற்போதைய புதிய அரசு எதிர்வரும் 10 ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று தடைகளை விதிக்கும் என எதிர்பார்க்கின்றோம்.&#8221; &#8211; என்று தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/former-state-minister-lohan-ratwatte-arrested-2/">இலங்கையில் மிக மோசமான மனித உரிமை மீறல்கள்: சர்வதேசத்திடம் யஸ்மின் சூகா வலியுறுத்து</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
