<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஆனந்த விஜேபால Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%e0%ae%86%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%af%87%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/ஆனந்த-விஜேபால/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Wed, 19 Nov 2025 11:03:55 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>ஆனந்த விஜேபால Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/ஆனந்த-விஜேபால/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>வெளிநாட்டில் பதுங்கியுள்ள பாதாள குழுவினருக்கு வலை: 80 பேருக்கு சிவப்பு பிடிவிறாந்து</title>
		<link>https://oruvan.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%b3/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Wed, 19 Nov 2025 11:02:53 +0000</pubDate>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[ஆனந்த விஜேபால]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=38705</guid>

					<description><![CDATA[<p>பாதாள குழுக்களுக்கு எதிரான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கையும் சிறப்பாக இடம்பெற்றுவருகின்றது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ பாதாள குழுவினருக்கு எதிராக பொலிஸார் மிகவும் சிறப்பான முறையில் செயல்பட்டுவருகின்றனர். இது சிலருக்கு வலிக்கின்றது. அதனால்தான் பொலிஸாரை இலக்கு வைத்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. பாதாள குழுவினருக்கு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%b3/">வெளிநாட்டில் பதுங்கியுள்ள பாதாள குழுவினருக்கு வலை: 80 பேருக்கு சிவப்பு பிடிவிறாந்து</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பாதாள குழுக்களுக்கு எதிரான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கையும் சிறப்பாக இடம்பெற்றுவருகின்றது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.</p>
<p>நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.</p>
<p>இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,</p>
<p>“ பாதாள குழுவினருக்கு எதிராக பொலிஸார் மிகவும் சிறப்பான முறையில் செயல்பட்டுவருகின்றனர். இது சிலருக்கு வலிக்கின்றது. அதனால்தான் பொலிஸாரை இலக்கு வைத்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.</p>
<p>பாதாள குழுவினருக்கு எதிரான நடவடிக்கை விஸ்தரிக்கப்பட்டுள்ளது. பாதாள குழு உறுப்பினர்களுக்கு சிவப்பு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 80 பேருக்கு இவ்வாறு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.<br />
அவர்களை இந்நாட்டுக்கு கொண்டுவருவதற்குரிய இராஜதந்திர முயற்சியும் எடுக்கப்பட்டுவருகின்றது.</p>
<p>The post <a href="https://oruvan.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%b3/">வெளிநாட்டில் பதுங்கியுள்ள பாதாள குழுவினருக்கு வலை: 80 பேருக்கு சிவப்பு பிடிவிறாந்து</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>திருகோணமலை சர்ச்சை &#8211; அரசாங்கம் நாடாளுமன்றில் விளக்கம்</title>
		<link>https://oruvan.com/trincomalee-controversy-government-explanation-in-parliament/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 17 Nov 2025 06:32:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[ananda wijepala]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[Trincomalee]]></category>
		<category><![CDATA[ஆனந்த விஜேபால]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=38425</guid>

					<description><![CDATA[<p>திருகோணமலையில் அசம்பாவிதம் ஏற்பட இடமளிக்க முடியாது எனவும் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். திருகோணமலை சம்பவம் குறித்து நாடாளுமன்றில் இன்று விளக்கமளித்த அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். திருகோணமலை, சம்புத்த ஜயந்தி விகாரை தொடர்பில் நேற்றிரவு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. புத்தர் சிலையொன்றை வைப்பதற்கு முற்பட்டவேளை இடம்பெற்ற குழப்ப நிலை தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதற்கமைய பொலிஸார் செயற்பட ஆரம்பித்தனர். குழப்பம் ஏற்பட்டால் புத்தர் சிலைக்கு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/trincomalee-controversy-government-explanation-in-parliament/">திருகோணமலை சர்ச்சை &#8211; அரசாங்கம் நாடாளுமன்றில் விளக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>திருகோணமலையில் அசம்பாவிதம் ஏற்பட இடமளிக்க முடியாது எனவும் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.</p>
<p>திருகோணமலை சம்பவம் குறித்து நாடாளுமன்றில் இன்று விளக்கமளித்த அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>திருகோணமலை, சம்புத்த ஜயந்தி விகாரை தொடர்பில் நேற்றிரவு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.</p>
<p>புத்தர் சிலையொன்றை வைப்பதற்கு முற்பட்டவேளை இடம்பெற்ற குழப்ப நிலை தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதற்கமைய பொலிஸார் செயற்பட ஆரம்பித்தனர்.</p>
<p>குழப்பம் ஏற்பட்டால் புத்தர் சிலைக்கு சேதம் ஏற்படக்கூடும் என தகவல் கிடைத்தது.</p>
<p>இதனையடுத்து பொலிஸார் சிலையை அங்கிருந்து அகற்றி, சிலைக்குரிய பாதுகாப்பை உறுதிப்படுத்தினர்.” எனவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார்.</p>
<p>இதேவேளை, திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகக் கட்டடப்பட்டு வரும் விகாரையில் நேற்றிரவு (16) பிக்குகளால் அடாத்தாக வைக்கப்பட்ட புத்தர் சிலை கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அங்கிருந்து பொலிஸாரால் அகற்றப்பட்டது.</p>
<p>பௌத்த பிக்குகள் புத்தர் சிலையை அடாத்தாக வைத்தமைக்குத் தமிழ் அரசியல்வாதிகள் உள்ளிட்ட தமிழர் தரப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.</p>
<p>இதனை தொடர்ந்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்கப் பொலிஸாரால் புத்தர் சிலை அகற்றப்பட்டு அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டது.</p>
<p>இதையடுத்து அந்தப் பகுதியில் நேற்று நள்ளிரவு வரை பதற்றமான சூழ்நிலை நிலவியது. பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்புக்காக அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.</p>
<p>எவ்வாறாயினும், இதன்போது, பிக்கு தலைமையிலான குழுவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தமையால், அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.</p>
<p>இந்தச் சந்தர்ப்பத்தில் பொலிஸார் மீது பிக்கு ஒருவர் தாக்குதல் மேற்கொண்டமை மேலும் பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்தியது.<br />
எனினும், இரவு வேளையில் கடற்கரைப் பகுதியில் இருந்து புத்தர் சிலை அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/trincomalee-controversy-government-explanation-in-parliament/">திருகோணமலை சர்ச்சை &#8211; அரசாங்கம் நாடாளுமன்றில் விளக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்தியா மற்றும் பாகிஸ்தானில் தற்கொலை குண்டு தாக்குதல்!!  இலங்கைக்கு ஆபத்தில்லை என்கிறது அரசு</title>
		<link>https://oruvan.com/suicide-bomb-attacks-in-india-and-pakistan-government-says-there-is-no-danger-to-sri-lanka/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 12 Nov 2025 06:58:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[ananda wijepala]]></category>
		<category><![CDATA[Delhi Red Fort blast]]></category>
		<category><![CDATA[ஆனந்த விஜேபால]]></category>
		<category><![CDATA[ஒருவன் செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=38057</guid>

					<description><![CDATA[<p>இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாட்டின் புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக இருப்பதால் நாட்டில் எந்த பாதுகாப்பு பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறுகிறார். &#8220;தற்போது, ​​இதுபோன்ற அச்சுறுத்தல் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இலங்கையின் புலனாய்வுத் துறை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. நமது பாதுகாப்புத் துறை, குறிப்பாக முப்படைகள் மற்றும் பொலிஸார், தேசிய பாதுகாப்பில் சிறப்பு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/suicide-bomb-attacks-in-india-and-pakistan-government-says-there-is-no-danger-to-sri-lanka/">இந்தியா மற்றும் பாகிஸ்தானில் தற்கொலை குண்டு தாக்குதல்!!  இலங்கைக்கு ஆபத்தில்லை என்கிறது அரசு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.</p>
<p>நாட்டின் புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக இருப்பதால் நாட்டில் எந்த பாதுகாப்பு பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறுகிறார்.</p>
<p>&#8220;தற்போது, ​​இதுபோன்ற அச்சுறுத்தல் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இலங்கையின் புலனாய்வுத் துறை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.</p>
<p>நமது பாதுகாப்புத் துறை, குறிப்பாக முப்படைகள் மற்றும் பொலிஸார், தேசிய பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.</p>
<p>எனவே, தேசிய பாதுகாப்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை.&#8221; என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>இதேவேளை, இந்திய தலைநகர் புது டில்லி செங்கோட்டை அருகோ இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவம் குறித்த தான் மிகுந்த கவலை கொள்வதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.</p>
<p>தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவு ஒன்றில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்நிலையில், இந்திய மக்களுடன் இலங்கை ஒற்றுமையுடன் இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.</p>
<p>டில்லியில் உள்ள செங்கோட்டை அடுத்த மூன்று நாட்களுக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு மூடப்படும் என்று இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.</p>
<p>வெடிப்பு நடந்த இடத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதால், நினைவுச்சின்னத்திற்கு அருகில் பொதுமக்கள் கூடுவதைக் குறைக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>எவ்வாறாயினும், இதுவொரு தற்கொலை பயங்கரவாத தாக்குதல் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.</p>
<p>The post <a href="https://oruvan.com/suicide-bomb-attacks-in-india-and-pakistan-government-says-there-is-no-danger-to-sri-lanka/">இந்தியா மற்றும் பாகிஸ்தானில் தற்கொலை குண்டு தாக்குதல்!!  இலங்கைக்கு ஆபத்தில்லை என்கிறது அரசு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தாவூத் இப்ராஹிம் குழு குறித்த எச்சரிக்கை &#8211; எதிர்வினையாற்றியுள்ள இலங்கை</title>
		<link>https://oruvan.com/warning-about-dawood-ibrahim-group-sri-lanka-reacts/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 10 Nov 2025 05:56:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[ananda wijepala]]></category>
		<category><![CDATA[Dawood Ibrahim group]]></category>
		<category><![CDATA[ஆனந்த விஜேபால]]></category>
		<category><![CDATA[ஒருவன்]]></category>
		<category><![CDATA[ஒருவன் செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=37828</guid>

					<description><![CDATA[<p>இந்திய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவான தாவூத் இப்ராஹிம் குழுவிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கும் இடையிலான புதிய கூட்டணி குறித்து அரசாங்கம் எதிர்வினையாற்றியுள்ளது. இது குறித்த இந்திய உளவுத்துறை அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து இலங்கையில் நடைபெறும் எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கைக்கும் எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறித்து குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, இந்த குறிப்பிட்ட தகவல் குறித்து தனக்குத் தெரியாது [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/warning-about-dawood-ibrahim-group-sri-lanka-reacts/">தாவூத் இப்ராஹிம் குழு குறித்த எச்சரிக்கை &#8211; எதிர்வினையாற்றியுள்ள இலங்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்திய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவான தாவூத் இப்ராஹிம் குழுவிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கும் இடையிலான புதிய கூட்டணி குறித்து அரசாங்கம் எதிர்வினையாற்றியுள்ளது.</p>
<p>இது குறித்த இந்திய உளவுத்துறை அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து இலங்கையில் நடைபெறும் எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கைக்கும் எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p>
<p>குறித்து குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, இந்த குறிப்பிட்ட தகவல் குறித்து தனக்குத் தெரியாது என கூறியுள்ளார்.</p>
<p>எவ்வாறாயினும், போதைப்பொருள் வர்த்தகத்தை எதிர்த்துப் போராட அரசாங்கம் ஏற்கனவே பாரிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.</p>
<p>ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கை நடந்தால், நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.  பொலிஸாருக்கு இது குறித்து தகவல் கிடைத்திருக்கலாம், அவர்கள் அதன்படி செயல்படுவார்கள்.” என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>தாவூத் இப்ராஹிம் குழு, தென்னிந்தியா மற்றும் இலங்கை வழியாக அதன் போதைப்பொருள் வலையமைப்பை விரிவுபடுத்துவதற்காக முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுடன் இணைந்து செயல்படுவதாக இந்திய உளவுத்துறை அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.</p>
<p>மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் பிற மாநிலங்களில் தீவிரப்படுத்தப்பட்ட சட்ட நடவடிக்கைகள் காரணமாக மேற்கு மற்றும் வட இந்தியாவில் தாவூத் இப்ராஹிம் குழு பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ளது.</p>
<p>இதனால், புதிய வழிகளைத் தேடி, இந்தக் குழு தற்போது தமிழ்நாடு மற்றும் இலங்கை முழுவதும் விடுதலைப் புலிகளின் கடத்தல் வலையமைப்பைப் பயன்படுத்தி போதைப்பொருட்களைக் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக அந்த எச்சரிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/warning-about-dawood-ibrahim-group-sri-lanka-reacts/">தாவூத் இப்ராஹிம் குழு குறித்த எச்சரிக்கை &#8211; எதிர்வினையாற்றியுள்ள இலங்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாள குழுக்களுக்கு அரசாங்கத்தின் எச்சரிக்கை</title>
		<link>https://oruvan.com/government-warns-underworld-groups-hiding-abroad/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Oct 2025 07:33:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ananda wijepala]]></category>
		<category><![CDATA[ஆனந்த விஜயபால]]></category>
		<category><![CDATA[ஆனந்த விஜேபால]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=36741</guid>

					<description><![CDATA[<p>வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாள குழு உறுப்பினர்களை நாட்டுக்கு அழைத்துவந்து, சட்டத்தின் முன் நிறுத்துவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அரசாங்க தொலைக்காட்சிக்கு நேற்றிரவு வழங்கிய செவ்வியில் அவர்  இந்த தகவலை வெளியிட்டார். &#8220;216 பேருக்கு எதிராக சிவப்பு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பாதாள குழுவை சேர்ந்தவர்கள் அல்லர். சுமார் 82 பேரே பாதாள குழுவுடன் தொடர்புடையவர்கள். பாதாள குழுவை சேர்ந்தவர்களில் 17 பேர் இதுவரையில் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்&#8221; எனவும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/government-warns-underworld-groups-hiding-abroad/">வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாள குழுக்களுக்கு அரசாங்கத்தின் எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாள குழு உறுப்பினர்களை நாட்டுக்கு அழைத்துவந்து, சட்டத்தின் முன் நிறுத்துவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.</p>
<p>அரசாங்க தொலைக்காட்சிக்கு நேற்றிரவு வழங்கிய செவ்வியில் அவர்  இந்த தகவலை வெளியிட்டார்.</p>
<p>&#8220;216 பேருக்கு எதிராக சிவப்பு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பாதாள குழுவை சேர்ந்தவர்கள் அல்லர். சுமார் 82 பேரே பாதாள குழுவுடன் தொடர்புடையவர்கள்.</p>
<p>பாதாள குழுவை சேர்ந்தவர்களில் 17 பேர் இதுவரையில் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்&#8221; எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p>
<p>பாதாள குழுவை சேர்ந்தவர்களில் அதிகளவானோர் துபாயிலேயே இருக்கின்றனர். சிலர் வெளிநாட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.  இவர்களை அழைத்து வருவதற்கான இராஜதந்திர நடவடிக்கையும் இடம்பெறுகின்றது.</p>
<p>இந்தோனேசியாவில் முன்னெடுக்கப்பட்டது போலவே எதிர்காலத்தில் நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>இந்நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவிட்டு வெளிநாடுகளில் பதுங்கி வாழ்வதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். அவர்கள் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.</p>
<p>இதற்கு நீதி அமைச்சின் ஒத்துழைப்பும் கிடைக்கப்பெற்றுவருகின்றது.&#8221; என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/government-warns-underworld-groups-hiding-abroad/">வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாள குழுக்களுக்கு அரசாங்கத்தின் எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அமைச்சர் ஆனந்த விஜேபால பொலிஸ் சேவையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஒருவர்!!</title>
		<link>https://oruvan.com/minister-ananda-wijepala-is-a-person-who-has-been-dismissed-from-the-police-service/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Oct 2025 11:11:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[ananda wijepala]]></category>
		<category><![CDATA[Chamara Sampath Dassanayake]]></category>
		<category><![CDATA[coruvan]]></category>
		<category><![CDATA[Samar Sampath]]></category>
		<category><![CDATA[ஆனந்த விஜேபால]]></category>
		<category><![CDATA[சாமர சம்பத் தசநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=36187</guid>

					<description><![CDATA[<p>அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் கடந்த காலம் மற்றும் பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர அல்லது &#8216;லாசா&#8217;வின் கொலையை பாதாள உலகத்தின் செயல் என்று அமைச்சர் ஆனந்த விஜேபால நேரடியாக விவரித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க குறிப்பிட்டார். எனினும், அந்த நாளைப் பற்றி நாம் பேசினால், அமைச்சர் விஜேபாலவின் வாழ்க்கைக் கதை பற்றியும் பேசலாம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/minister-ananda-wijepala-is-a-person-who-has-been-dismissed-from-the-police-service/">அமைச்சர் ஆனந்த விஜேபால பொலிஸ் சேவையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஒருவர்!!</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் கடந்த காலம் மற்றும் பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p>
<p>வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர அல்லது &#8216;லாசா&#8217;வின் கொலையை பாதாள உலகத்தின் செயல் என்று அமைச்சர் ஆனந்த விஜேபால நேரடியாக விவரித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க குறிப்பிட்டார்.</p>
<p>எனினும், அந்த நாளைப் பற்றி நாம் பேசினால், அமைச்சர் விஜேபாலவின் வாழ்க்கைக் கதை பற்றியும் பேசலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>நாடாளுமன்ற உறுப்பினர் தசநாயக்க வெளியிட்ட தகவல்களின்படி, அமைச்சர் ஆனந்த விஜேபால 1988 ஆம் ஆண்டு பொலிஸ் துறையில் ஒரு சிறப்பு அதிகாரியாக இணைந்தார்.</p>
<p>ஆனால் அவர் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தபோது, ​​புலனாய்வு அறிக்கைகள் மற்றும் சிஐடி அறிக்கைகளின் அடிப்படையில் அவர் காவல்துறையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார்.</p>
<p>விஜேபால காவல்துறையில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம், அவர் ஆயுதப் பிரிவின் தலைவராக செயல்பட்டதால் தான் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க வலியுறுத்துகிறார்.</p>
<p>&#8220;ஆயுதப் பிரிவின் தலைவராகவோ அல்லது பயங்கரவாதியாகவோ செயல்பட்டதற்காக நீங்கள் அந்த நேரத்தில் காவல்துறையில் இருந்து நீக்கப்பட்டீர்கள்&#8221; என்று அவர் அமைச்சரை நோக்கி குறிப்பிட்டார்.</p>
<p>அமைச்சரின் கடந்த காலம் குறித்து கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் தசநாயக்க, சிஐடி அறிக்கை மற்றும் உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் காவல்துறையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஒருவர் இன்று காவல் துறைக்கு ஆலோசனை வழங்கி பாதுகாக்கும் காவல்துறை அமைச்சராக உள்ளார் என்று கூறினார்.</p>
<p>நாட்டு மக்கள் இந்த உண்மையை அறிந்திருக்கவில்லை என்றாலும், கல்கமுவ, அம்பன்பொல மற்றும் குருநாகல் மாவட்டங்களில் உள்ள அனைத்து மக்களும் இந்த தகவலை அறிந்திருக்கிறார்கள் என்று அவர் மேலும் கூறினார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/minister-ananda-wijepala-is-a-person-who-has-been-dismissed-from-the-police-service/">அமைச்சர் ஆனந்த விஜேபால பொலிஸ் சேவையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஒருவர்!!</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கையின் 15 பாதாள உலக நபர்கள் வெளிநாடுகளில் காவலில் உள்ளனர் &#8211; அரசாங்கம் தகவல்</title>
		<link>https://oruvan.com/15-underworld-figures-from-sri-lanka-in-custody-abroad-government/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 12 Sep 2025 03:51:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ananda wijepala]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[Parliament News]]></category>
		<category><![CDATA[ஆனந்த விஜேபால]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=32347</guid>

					<description><![CDATA[<p>சர்வதேச பொலிஸாரின் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட மொத்தம் பதினைந்து இலங்கை பாதாள உலக நபர்கள் தற்போது ரஷ்யா, ஓமன், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள அதிகாரிகளின் காவலில் இருப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். அந்தந்த நாடுகளில் பாதுகாப்பு பிரச்சினைகள் முடிவுக்கு வந்தவுடன் அவர்கள் இலங்கைக்கு மீண்டும் அழைத்து வரப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார், இந்த ஆண்டு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/15-underworld-figures-from-sri-lanka-in-custody-abroad-government/">இலங்கையின் 15 பாதாள உலக நபர்கள் வெளிநாடுகளில் காவலில் உள்ளனர் &#8211; அரசாங்கம் தகவல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சர்வதேச பொலிஸாரின் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட மொத்தம் பதினைந்து இலங்கை பாதாள உலக நபர்கள் தற்போது ரஷ்யா, ஓமன், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள அதிகாரிகளின் காவலில் இருப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.</p>
<p>அந்தந்த நாடுகளில் பாதுகாப்பு பிரச்சினைகள் முடிவுக்கு வந்தவுடன் அவர்கள் இலங்கைக்கு மீண்டும் அழைத்து வரப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p>
<p>நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்,</p>
<p>இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் இன்று வரை, வெளிநாடுகளில் மறைந்திருந்த 11 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.</p>
<p>இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் 10ஆம் திகதி வரை மொத்தம் 105 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் பதிவாகியுள்ளதாகவும், அந்த சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 322 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p>
<p>கைது செய்யப்பட்டவர்களில் 33 துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள், 24 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட 265 சந்தேக நபர்கள் அடங்குவர்.</p>
<p>ஜனவரி முதல் இன்றுவரை மொத்தம் 1,698 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன, அவற்றில் 58 டி-56 துப்பாக்கிகள், 61 கைத்துப்பாக்கிகள், 40 ரிவால்வர்கள், 169 12-போர் துப்பாக்கிகள், 33 வீட்டில் தயாரிக்கப்பட்ட &#8216;கல்கடாஸ்&#8217; கைத்துப்பாக்கிகள், ஆறு ரிப்பீட்டர்கள் அடங்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>இலங்கையின் திட்டமிட்ட குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இத்தாலி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, இந்தோனேசியா, கனடா, ரஷ்யா, ஓமான் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>தற்போது, ​​ரஷ்யா, ஓமன், துபாய் மற்றும் இந்தியாவில் 15 பேர் சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டு, வெளிநாடுகளில் மறைந்திருக்கும் பெரிய குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p>
<p>அவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/15-underworld-figures-from-sri-lanka-in-custody-abroad-government/">இலங்கையின் 15 பாதாள உலக நபர்கள் வெளிநாடுகளில் காவலில் உள்ளனர் &#8211; அரசாங்கம் தகவல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>முன்னாள் ஜனாதிபதிகளுக்காக 2024 இல் எவ்வளவு செலவானது? </title>
		<link>https://oruvan.com/how-much-did-it-cost-for-former-presidents-in-2024/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Thu, 11 Sep 2025 05:48:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆனந்த விஜேபால]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=32278</guid>

					<description><![CDATA[<p>ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்குதல் சட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் விதிகளின்படி முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் செலவினங்கள் ரத்து செய்யப்படவுள்ளன. இந்தநிலையில், கடந்த வருடத்தில் மாத்திரம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 9 கோடியே 85 இலட்சத்து 48 ஆயிரத்து 839 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றில் தெரிவித்தார். சட்ட விதிகளின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லங்களை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/how-much-did-it-cost-for-former-presidents-in-2024/">முன்னாள் ஜனாதிபதிகளுக்காக 2024 இல் எவ்வளவு செலவானது? </a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்குதல் சட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் விதிகளின்படி முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் செலவினங்கள் ரத்து செய்யப்படவுள்ளன.</p>
<p>இந்தநிலையில், கடந்த வருடத்தில் மாத்திரம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 9 கோடியே 85 இலட்சத்து 48 ஆயிரத்து 839 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றில் தெரிவித்தார்.</p>
<p>சட்ட விதிகளின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லங்களை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும்.</p>
<p>முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் உத்தியோகபூர்வ இல்லங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/how-much-did-it-cost-for-former-presidents-in-2024/">முன்னாள் ஜனாதிபதிகளுக்காக 2024 இல் எவ்வளவு செலவானது? </a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகப்பூர்வ இல்லங்கள் தொடர்பில் வெளியான தகவல்</title>
		<link>https://oruvan.com/information-released-regarding-the-official-residences-of-former-ministers/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Tue, 09 Sep 2025 06:26:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[ஆனந்த விஜேபால]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=32071</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய 50 உத்தியோகபூர்வ இல்லங்களை எதிர்காலத்தில் அரச நிறுவனங்கள் அல்லது பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லங்களை அரச நிறுவனங்களின் பயன்பாட்டிற்காகப் பயன்படுத்துவது குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் காவல்துறை மாஅதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோர் நேற்று கொழும்பில் உள்ள மலலசேகர மாவத்தை மற்றும் கெப்பட்டிபொல வீதியில் அமைந்துள்ள [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/information-released-regarding-the-official-residences-of-former-ministers/">முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகப்பூர்வ இல்லங்கள் தொடர்பில் வெளியான தகவல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய 50 உத்தியோகபூர்வ இல்லங்களை எதிர்காலத்தில் அரச நிறுவனங்கள் அல்லது பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.</p>
<p>முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லங்களை அரச நிறுவனங்களின் பயன்பாட்டிற்காகப் பயன்படுத்துவது குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.</p>
<p>இந்த நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் காவல்துறை மாஅதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோர் நேற்று கொழும்பில் உள்ள மலலசேகர மாவத்தை மற்றும் கெப்பட்டிபொல வீதியில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் ஒருவரின் உத்தியோகபூர்வ இல்லத்தை ஆய்வு செய்துள்ளனர்.</p>
<p>இதன்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/information-released-regarding-the-official-residences-of-former-ministers/">முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகப்பூர்வ இல்லங்கள் தொடர்பில் வெளியான தகவல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கெஹெல்பத்தர பத்மே நடத்தி வந்த தொழிற்சாலை &#8211; பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல்</title>
		<link>https://oruvan.com/information-released-by-the-defense-minister-regarding-the-factory-run-by-kehelpatara-padme/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 03 Sep 2025 08:32:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#police]]></category>
		<category><![CDATA[ananda wijepala]]></category>
		<category><![CDATA[Kehelpatara]]></category>
		<category><![CDATA[ஆனந்த விஜேபால]]></category>
		<category><![CDATA[கெஹெல்பத்தர பத்மே]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=31548</guid>

					<description><![CDATA[<p>நுவரெலியாவில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ICE) தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த கெஹெல்பத்தர பத்மே, இந்தத் தொழிற்சாலையில் நான்கு மில்லியன் ரூபாவிற்கு அதிகமாக முதலீடு செய்துள்ளதாக அமைச்சர் விஜேபால தெரிவித்தார். நுவரெலியாவில் உள்ள ஒரு வீட்டை போதைப்பொருள் தொழிற்சாலையை நடத்துவதற்கு வாடகைக்கு எடுத்துள்ளதாகவும், இதற்காக 2000 கிலோவுக்கும் அதிகமான இரசாயனங்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார். “அவர்கள் இலங்கையில் ஐஸ் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/information-released-by-the-defense-minister-regarding-the-factory-run-by-kehelpatara-padme/">கெஹெல்பத்தர பத்மே நடத்தி வந்த தொழிற்சாலை &#8211; பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நுவரெலியாவில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ICE) தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.</p>
<p>பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த கெஹெல்பத்தர பத்மே, இந்தத் தொழிற்சாலையில் நான்கு மில்லியன் ரூபாவிற்கு அதிகமாக முதலீடு செய்துள்ளதாக அமைச்சர் விஜேபால தெரிவித்தார்.</p>
<p>நுவரெலியாவில் உள்ள ஒரு வீட்டை போதைப்பொருள் தொழிற்சாலையை நடத்துவதற்கு வாடகைக்கு எடுத்துள்ளதாகவும், இதற்காக 2000 கிலோவுக்கும் அதிகமான இரசாயனங்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.</p>
<p>“அவர்கள் இலங்கையில் ஐஸ் போதைப் பொருளை உற்பத்தி செய்துள்ளனர். இது ஒரு தீவிரமான பிரச்சினை. நடந்து வரும் விசாரணைகள் கூடுதல் தகவல்களை வெளிப்படுத்துகின்றன.</p>
<p>இந்த விடயத்தில் இன்னும் ஆழமான விசாரணைகளை நடத்த வேண்டியிருக்கும்,” என்று அமைச்சர் விஜேபால தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்த பாதாள உலகக் குழு உறுப்பினர்களால் பராமரிக்கப்படும் போலி கடவுச்சீட்டுகளை பெறுவதற்கு அரசியல் தொடர்புகள், பொலிஸ் அதிகாரிகளுடனான தொடர்புகள் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளுடனான தொடர்புகள் பற்றிய தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.</p>
<p>இந்த விவரங்களை உறுதிப்படுத்த மேலும் ஆழமான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன என்றார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/information-released-by-the-defense-minister-regarding-the-factory-run-by-kehelpatara-padme/">கெஹெல்பத்தர பத்மே நடத்தி வந்த தொழிற்சாலை &#8211; பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
