<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஆந்திர தலைநகர் அமராவதி Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/ஆந்திர-தலைநகர்-அமராவதி/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Tue, 08 Apr 2025 06:52:04 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>ஆந்திர தலைநகர் அமராவதி Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/ஆந்திர-தலைநகர்-அமராவதி/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஆந்திர தலைநகர் அமராவதிக்காக மத்திய அரசு ரூ.4,285 கோடி நிதி</title>
		<link>https://oruvan.com/central-government-allocates-rs-4285-crore-for-andhra-pradesh-capital-amaravati/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Tue, 08 Apr 2025 06:52:04 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆந்திர தலைநகர் அமராவதி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=17094</guid>

					<description><![CDATA[<p>ஆந்​திர மாநில தலைநகருக்​காக மத்​திய அரசு ரூ.4,285 கோடி நிதி வழங்கி உள்​ளது. ஒருங்​கிணைந்த ஆந்​திர மாநிலம் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 2-ம் திகதி இரண்​டாக பிரிக்​கப்​பட்டு தெலங்​கானா மாநிலம் உரு​வானது. அப்​போது ஹைத​ரா​பாத் தெலங்​கா​னா​வின் தலைநக​ராக இருக்​கும் என்​றும், புதிய தலைநகரை உரு​வாக்​கும் வரை அல்​லது 10 ஆண்​டுகளுக்கு ஆந்​தி​ரா​வின் தலைநக​ராக​வும் ஹைத​ரா​பாத் இருக்​கும் என்​றும் மாநில பிரிவினை மசோதா​வில் கூறப்​பட்​டிருந்​தது. இருந்​தா​லும், மாநிலம் பிரிந்த பின்​னர் ஆந்​தி​ரா​வின் முதல்​வ​ரான சந்​திர​பாபு நாயுடு, [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/central-government-allocates-rs-4285-crore-for-andhra-pradesh-capital-amaravati/">ஆந்திர தலைநகர் அமராவதிக்காக மத்திய அரசு ரூ.4,285 கோடி நிதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஆந்​திர மாநில தலைநகருக்​காக மத்​திய அரசு ரூ.4,285 கோடி நிதி வழங்கி உள்​ளது. ஒருங்​கிணைந்த ஆந்​திர மாநிலம் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 2-ம் திகதி இரண்​டாக பிரிக்​கப்​பட்டு தெலங்​கானா மாநிலம் உரு​வானது.</p>
<p>அப்​போது ஹைத​ரா​பாத் தெலங்​கா​னா​வின் தலைநக​ராக இருக்​கும் என்​றும், புதிய தலைநகரை உரு​வாக்​கும் வரை அல்​லது 10 ஆண்​டுகளுக்கு ஆந்​தி​ரா​வின் தலைநக​ராக​வும் ஹைத​ரா​பாத் இருக்​கும் என்​றும் மாநில பிரிவினை மசோதா​வில் கூறப்​பட்​டிருந்​தது.</p>
<p>இருந்​தா​லும், மாநிலம் பிரிந்த பின்​னர் ஆந்​தி​ரா​வின் முதல்​வ​ரான சந்​திர​பாபு நாயுடு, குண்​டூர்​-​விஜய​வாடா இடையே அமராவ​தியை தலைநகர​மாக அறிவித்​தார். இதற்​காக அப்​பகுதி விவ​சாயிகள் சுமார் 30 ஆயிரம் ஏக்​கர் நிலத்தை தாமாகவே முன் வந்து வழங்​கினர். 2014 முதல் 2019 வரை அமராவ​தி​யில் சட்​டப்​பேர​வை, தலைமை செயல​கம் போன்​றவை கட்​டப்​பட்​டு, அங்​கேயே ஆட்​சி​யும் நடந்​தது.</p>
<p>ஆனால், 2019-ல் ஒய்​.எஸ்​.ஆர். காங்​கிரஸ் கட்​சி​யின் ஜெகன்​மோகன் ரெட்டி முதல்​வ​ரா​னார். இதையடுத்​து, அமராவ​தி​யில் சட்​டப்​பேர​வை​யும், கர்​னூலில் உயர் நீதிமன்​ற​மும், விசாகப்​பட்​டினத்​தில் தலைமை செயல​க​மும் இருக்​கும்​படி மூன்று தலைநகர கொள்​கையை கொண்டு வந்​தார். ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்​பியது.</p>
<p>இதனை தொடர்ந்து 2024-ல் ஆந்​தி​ரா​வில் நடந்த தேர்​தலில் தெலுங்கு தேசம் கூட்​டணி வெற்றி பெற்று சந்​திர​பாபு நாயுடு மீண்​டும் முதல்​வ​ரா​னார். மீண்​டும் அமராவ​தியே தலைநக​ராக இருக்​கும் என சந்​திர​பாபு நாயுடு அறி​வித்​ததோடு, அதனை மீண்​டும் உயிர்ப்​பிக்க மத்​திய அரசிடம் நிதி உதவி​யும் கேட்​டார்.</p>
<p>ஏற்​கெனவே மாநில பிரி​வினை மசோ​தா​வில் ஆந்​தி​ரா​வின் தலைநகரை நிர்​மாணிக்க மத்​திய அரசு நிதி உதவி செய்​யும் என கூறி​யிருப்​ப​தால், மத்​திய அரசும் நிதி உதவி வழங்க ஒப்​புக்​கொண்​டது.</p>
<p>தற்​போது அமராவ​தி​யில் கட்​டு​மானப் பணி​கள் கிடு​கிடு​வென நடந்து வரு​கின்​றன. மேலும், ஆந்​திர அரசுக்கு தேவை​யான அரசு கட்​டிடங்​கள், அரசு அதி​காரி​கள், ஊழியர்​களுக்​கான குடி​யிருப்பு கட்​டிடங்​கள், வணிக வளாகங்​கள் என அமராவ​தியை ஒரு நவீன தலைநகர​மாக சந்​திர​பாபு நாயுடு உரு​வாக்கி வரு​கிறார். இந்​நிலை​யில், ஆந்​தி​ரா​வுக்கு ரூ.4,285 கோடி நிதி உதவியை மத்​திய அரசு நேற்று வழங்கி இருக்​கிறது என்​பது குறிப்​பிடத்​தக்​கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/central-government-allocates-rs-4285-crore-for-andhra-pradesh-capital-amaravati/">ஆந்திர தலைநகர் அமராவதிக்காக மத்திய அரசு ரூ.4,285 கோடி நிதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
