<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>அவுஸ்திரேலியா Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/அவுஸ்திரேலியா/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Mon, 27 Apr 2026 05:18:58 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>அவுஸ்திரேலியா Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/அவுஸ்திரேலியா/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>அவுஸ்திரேலிய கடன் நிதி திருட்டு குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த சுரேன் ராகவன் கோரிக்கை</title>
		<link>https://oruvan.com/suren-raghavan-demands-independent-investigation-into-australian-loan-fund-theft/</link>
		
		<dc:creator><![CDATA[Rasmila]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Apr 2026 05:18:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அவுஸ்திரேலியா]]></category>
		<category><![CDATA[முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49145</guid>

					<description><![CDATA[<p>அவுஸ்திரேலியாவுக்குச் செலுத்த வேண்டிய கடன் தொகை திருடப்பட்டமை தொடர்பில் சுதந்திரமான மற்றும் கட்சி சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், ஜனாதிபதி நேரடியாகத் தலையிட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் இதற்கான விசாரணைக் குழுவை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களைத் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யாது, முழுமையாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும், இழக்கப்பட்ட நிதியைச் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/suren-raghavan-demands-independent-investigation-into-australian-loan-fund-theft/">அவுஸ்திரேலிய கடன் நிதி திருட்டு குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த சுரேன் ராகவன் கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அவுஸ்திரேலியாவுக்குச் செலுத்த வேண்டிய கடன் தொகை திருடப்பட்டமை தொடர்பில் சுதந்திரமான மற்றும் கட்சி சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் கோரிக்கை விடுத்துள்ளார்.</p>
<p>கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், ஜனாதிபதி நேரடியாகத் தலையிட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் இதற்கான விசாரணைக் குழுவை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.</p>
<p>இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களைத் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யாது, முழுமையாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும், இழக்கப்பட்ட நிதியைச் சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட பணத்திலிருந்து மீள வசூலிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p>
<p>மேலும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிதியமைச்சர் பதவியிலிருந்து விலகி, அந்தப் பொறுப்பைத் தகுதியான அதிகாரியிடம் ஒப்படைத்துவிட்டு இந்தச் சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.</p>
<p>திறைசேரியின் பாதுகாப்பு கேள்விக்குறியானால் எவரும் நாட்டில் முதலீடு செய்ய முன்வர மாட்டார்கள் என எச்சரித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன், இது குறித்து அரசாங்கம் உடனடியாகப் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/suren-raghavan-demands-independent-investigation-into-australian-loan-fund-theft/">அவுஸ்திரேலிய கடன் நிதி திருட்டு குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த சுரேன் ராகவன் கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மேற்கு அவுஸ்திரேலியாவில் பயங்கரவாதத் தாக்குதலுக்குத் திட்டம்</title>
		<link>https://oruvan.com/terrorist-attack-planned-in-western-australia/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Sat, 28 Feb 2026 02:45:21 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அவுஸ்திரேலியா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=45945</guid>

					<description><![CDATA[<p>மேற்கு அவுஸ்திரேலியாவில் பயங்கரவாதத் தாக்குதலுக்குத் திட்டமிட்டிருந்தார் எனக் கூறப்படும் 20 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த இளைஞர் நாடாளுமன்றம் மற்றும் காவல் நிலையங்கள் போன்ற பொதுக் கட்டிடங்களை இலக்கு வைத்ததாகப் புலனாய்வு அமைப்புகள் சந்தேகிக்கின்றன. இணையத்தில் அவரது சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளைக் கண்காணித்த அதிகாரிகள், அவரது இல்லத்தில் நடத்திய சோதனையைத் தொடர்ந்து இந்த iகது நடவடிக்கையை பொலிஸார் எடுத்துள்ளனர். இந்த இளைஞர் மீது பயங்கரவாதச் சதி, தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை வைத்திருத்தல் மற்றும் அச்சுறுத்தல் விடுத்தல் உள்ளிட்ட [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/terrorist-attack-planned-in-western-australia/">மேற்கு அவுஸ்திரேலியாவில் பயங்கரவாதத் தாக்குதலுக்குத் திட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மேற்கு அவுஸ்திரேலியாவில் பயங்கரவாதத் தாக்குதலுக்குத் திட்டமிட்டிருந்தார் எனக் கூறப்படும் 20 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>இந்த இளைஞர் நாடாளுமன்றம் மற்றும் காவல் நிலையங்கள் போன்ற பொதுக் கட்டிடங்களை இலக்கு வைத்ததாகப் புலனாய்வு அமைப்புகள் சந்தேகிக்கின்றன.</p>
<p>இணையத்தில் அவரது சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளைக் கண்காணித்த அதிகாரிகள், அவரது இல்லத்தில் நடத்திய சோதனையைத் தொடர்ந்து இந்த iகது நடவடிக்கையை பொலிஸார் எடுத்துள்ளனர்.</p>
<p>இந்த இளைஞர் மீது பயங்கரவாதச் சதி, தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை வைத்திருத்தல் மற்றும் அச்சுறுத்தல் விடுத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.</p>
<p>பெர்த் நகரில் சமீபத்தில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதல் முயற்சிக்கு சில வாரங்களுக்குப் பிறகு இந்த முக்கியக் கைது நிகழ்ந்துள்ளது.</p>
<p>இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் தற்போது நீதிமன்றத்தின் முன்னிலையில் விரிவாக நடைபெற்று வருவதாக அவுஸ்திரேலியா பொலிஸார் கூறியுள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/terrorist-attack-planned-in-western-australia/">மேற்கு அவுஸ்திரேலியாவில் பயங்கரவாதத் தாக்குதலுக்குத் திட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சிட்னியில் நடந்த துப்பாகிச் சூட்டு சம்பவத்தில் 20 பேர் படுகாயம் – 60 வயதான சந்தேகநபர் கைது</title>
		<link>https://oruvan.com/20-people-injured-in-sydney-shooting-60-year-old-suspect-arrested/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Oct 2025 06:41:40 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அவுஸ்திரேலியா]]></category>
		<category><![CDATA[சிட்னி]]></category>
		<category><![CDATA[துப்பாக்கிச் சூடு]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=34539</guid>

					<description><![CDATA[<p>அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறைந்தது 20 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தசம் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாகவும், துப்பாக்கிதாரி சுமார் 100 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 60 வயது மதிக்கத்தக்க சந்தேகநபர் சிட்னி நகரின் மேற்கில் உள்ள ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள வீதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/20-people-injured-in-sydney-shooting-60-year-old-suspect-arrested/">சிட்னியில் நடந்த துப்பாகிச் சூட்டு சம்பவத்தில் 20 பேர் படுகாயம் – 60 வயதான சந்தேகநபர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறைந்தது 20 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>காயமடைந்தவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>இந்தசம் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாகவும், துப்பாக்கிதாரி சுமார் 100 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>60 வயது மதிக்கத்தக்க சந்தேகநபர் சிட்னி நகரின் மேற்கில் உள்ள ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள வீதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.</p>
<p>எவ்வாறாயினும், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்தச் துப்பாக்கிச் சூட்டு சம்பத்திற்கான காரணம் தெரியவரவில்லை.  காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் நபர் மீது இதுவரை எந்தக் குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை.</p>
<p>துப்பாக்கிதாரியின் நோக்கம் தெளிவாகத் தெரியவில்லை, எனினும், இந்தச் சம்பம் &#8220;பயங்கரவாத நடவடிக்கை இல்லை என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளளனர்.</p>
<p>சம்பம்வம் குறித்து நியூ சவுத் வேல்ஸ்  பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/20-people-injured-in-sydney-shooting-60-year-old-suspect-arrested/">சிட்னியில் நடந்த துப்பாகிச் சூட்டு சம்பவத்தில் 20 பேர் படுகாயம் – 60 வயதான சந்தேகநபர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை</title>
		<link>https://oruvan.com/sri-lankan-man-banned-from-leaving-australia/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Jan 2025 03:04:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Australia]]></category>
		<category><![CDATA[Court]]></category>
		<category><![CDATA[அவுஸ்திரேலியா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=6255</guid>

					<description><![CDATA[<p>சர்வதேச விமானத்தில் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது, ​​அவர் அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. 41 வயதான அசங்க மேத்யூ பொடியப்புஹாமிலகே, ஒரு மொழிபெயர்ப்பாளருடனும் இரண்டு ஆதரவாளர்களுடனும் மெல்போர்ன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார். இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா செல்லும் விமானத்தில் மற்றொரு பயணி அளித்த புகாரைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 18ஆம் திகதி மெல்போர்ன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பின்னர் அவர் மீது குற்றம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lankan-man-banned-from-leaving-australia/">அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சர்வதேச விமானத்தில் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது, ​​அவர் அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.</p>
<p>41 வயதான அசங்க மேத்யூ பொடியப்புஹாமிலகே, ஒரு மொழிபெயர்ப்பாளருடனும் இரண்டு ஆதரவாளர்களுடனும் மெல்போர்ன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.</p>
<p>இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா செல்லும் விமானத்தில் மற்றொரு பயணி அளித்த புகாரைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 18ஆம் திகதி மெல்போர்ன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பின்னர் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.</p>
<p>பொடியப்புஹாமிலகே விமானப் பயணத்தின் போது அநாகரீகமான செயலைச் செய்ததாக பொலிஸார் குற்றம் சாட்டுகின்றனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.</p>
<p>சம்பவம் நடந்த மறுநாளே அவர் முதலில் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில், அவருக்கு கடுமையான நிபந்தனைகளின் கீழ் பிணை வழங்கப்பட்டிருந்தது.</p>
<p>அவரது கடவுச்சீட்டை ஒப்படைத்தல், மாநிலத்திற்குள் தங்குதல், வாரத்திற்கு மூன்று முறை பொலிஸாரிடம் அறிக்கைச் செய்தல் மற்றும் வீட்டு ஊரடங்கு உத்தரவைப் பின்பற்றுதல் ஆகியவை இதில் அடங்கும்.</p>
<p>நீதிமன்றத்தில், அவரது சட்டத்தரணி, க்ளென் வேவர்லியில் தனியாக வாழ அனுமதிக்க அவரது பிணை நிபந்தனைகளில் மாற்றம் கோரினார்.</p>
<p>ஜனவரி 30 ஆம் திகதிக்குள் சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களை அவரது வாதத்திற்கு பொலிஸார் வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அனைத்து பயணிகளும் பறக்கும் போது பாதுகாப்பாக உணர உரிமை உண்டு என்றும், அவுஸ்திரேலிய சட்டம் விமானங்களிலும் விமான நிலையங்களிலும் உள்ள அனைவருக்கும் பொருந்தும் என்றும் அந்நாட்டு கூட்டாட்சி காவல்துறை அதிகாரி ஒருவர் வலியுறுத்தினார்.</p>
<p>பொருத்தமற்ற நடத்தைக்கு அவுஸ்திரேலிய கூட்டாச்சி பொலிஸார் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையைக் கொண்டுள்ளனர்.</p>
<p>சர்வதேச விமானத்தில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபர், அவரது நீதிமன்ற வழக்கு நடந்து</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lankan-man-banned-from-leaving-australia/">அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இளம் வீரருடன் வம்பிழுத்தாரா விராட் கோலி? &#8211; சிட்னி டெஸ்டில் தடை</title>
		<link>https://oruvan.com/did-virat-kohli-flirt-with-sam-konstas-banned-in-sydney-test/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 26 Dec 2024 06:39:56 +0000</pubDate>
				<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Border-Gavaskar series]]></category>
		<category><![CDATA[Border–Gavaskar Trophy]]></category>
		<category><![CDATA[Sam Konstas]]></category>
		<category><![CDATA[Sydney Test]]></category>
		<category><![CDATA[Virat Kohli]]></category>
		<category><![CDATA[அவுஸ்திரேலியா]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[கோலி]]></category>
		<category><![CDATA[போர்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர்]]></category>
		<category><![CDATA[விராட்]]></category>
		<category><![CDATA[விராட் கோலி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=3978</guid>

					<description><![CDATA[<p>இந்திய மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போர்டர் &#8211; கவாஸ்கரி டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில் விராட் கோலி மற்றும் சாம் கோன்ஸ்டஸ் மோதிக்கொண்ட சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இரு வீரர்களுக்கு போட்டித் தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகின்றது. இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்பேர்னில் இடம்பெறுகின்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது. சற்று முன்னர் வரை 76 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்துள்ள அந்த அணி [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/did-virat-kohli-flirt-with-sam-konstas-banned-in-sydney-test/">இளம் வீரருடன் வம்பிழுத்தாரா விராட் கோலி? &#8211; சிட்னி டெஸ்டில் தடை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்திய மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போர்டர் &#8211; கவாஸ்கரி டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில் விராட் கோலி மற்றும் சாம் கோன்ஸ்டஸ் மோதிக்கொண்ட சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>இதனால் இரு வீரர்களுக்கு போட்டித் தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகின்றது.</p>
<p>இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்பேர்னில் இடம்பெறுகின்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.</p>
<p>சற்று முன்னர் வரை 76 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்துள்ள அந்த அணி 282 ஓட்டங்களை குவித்துள்ளது. இந்த போட்டியின் முக்கிய அம்சமாக சுமார் 1,445 நாட்களுக்கு பின்னர் பும்ரா வீசிய பந்தில் சிக்ஸர் அடிக்கப்பட்டது.</p>
<p>கடந்த நான்கு ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் அபாராமாக திறமையை வெளிப்படுத்தி வரும் பும்ரா கடந்த காலங்களில் வீசிய 4,484 பந்துகளுக்கு பின்னர் இன்று முதல் முறையாக சிக்ஸர் அடிக்கப்பட்டது.</p>
<p>அவுஸ்திரேலியா அணியின் அறிமுக வீரராக களமிறங்கியுள்ள சாம் கோன்ஸ்டஸ் பும்ராவின் பந்துவீச்சை லாவகமாக எதிர்கொண்டார். அவர் வீசிய இரண்டாவது ஓவரில் மட்டு 16 ஓட்டங்களை கோன்ஸ்டஸ் அடித்திருந்தார்.</p>
<p>இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் பும்ராவின் ஓவரில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர் என்ற சாதனையை கோன்ஸ்டஸ் படைத்தார். இந்தப் போட்டியின் மற்றுமொரு முக்கிய சம்பவமாக விராட் கோலி மற்றும் சாம் கோன்ஸ்டஸ் மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>10 ஓவரின் முடிவில் பந்தை கையில் எடுத்துக்கொண்டு ஓவர் மாற்றுவதற்காக விராட் கோலி நடந்து சென்ற போது எதிர்திசையில் கோன்ஸ்டஸ் நடந்து வந்தார். இதன்போது இருவரும் தங்களுடைய தோளில் நேருக்கு நேராக மோதிக்கொண்டனர்.</p>
<p>இதனையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட போது மைதானத்தில் இருந்த உஸ்மன் கவஜா மற்றும் நடுவர்கள் தலையிட்டு நிலைமையை சரிசெய்தனர்.</p>
<p>ஆனால் அந்த இடத்தில் விராட் கோலி தான் வேண்டுமென்றே கோன்ஸ்டஸ் மீது மோதியதாக நேரலையில் ரிக்கி பாண்டிங் மற்றும் மைக்கேல் வாகன போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சித்தார்கள்.</p>
<p>இந்நிலையில் அந்த தருணத்தில் யார் மீது தவறு இருக்கிறது என்பதை போட்டி நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் விசாரிப்பார் என அவுஸ்திரேலிய வாரியம் அறிவித்துள்ளது.</p>
<p>ஒருவேளை அதன் முடிவில் அவர்கள் மீது தவறு இருந்தால் நடுவர் லெவல் 1 அல்லது லெவல் 2 விதிமுறை மீறியதாக பரிந்துரை செய்வார். அதை ஏற்றுக் கொண்டு ஐசிசி 3 அல்லது 4 கருப்பு புள்ளிகளை தண்டனையாக கொடுக்க (லெவல் 2 விதிமுறை) வாய்ப்புள்ளது.</p>
<p>ஒருவேளை லெவல் 2 விதிமுறையை மீறியதற்காக 4 புள்ளிகளை பெற்றால் இந்தத் தொடரின் 5வது போட்டியில் விராட் கோலி அல்லது கோன்ஸ்டஸ் விளையாடுவதற்கு தடை பெறுவார்கள்.</p>
<p>லெவல் 1 விதிமுறை மீறியதாக கருதப்பட்டால் அபராதம் மட்டும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/did-virat-kohli-flirt-with-sam-konstas-banned-in-sydney-test/">இளம் வீரருடன் வம்பிழுத்தாரா விராட் கோலி? &#8211; சிட்னி டெஸ்டில் தடை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
