<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>அருட்தந்தை மா.சத்திவேல் Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/அருட்தந்தை-மா-சத்திவேல்/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Tue, 29 Jul 2025 13:07:03 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>அருட்தந்தை மா.சத்திவேல் Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/அருட்தந்தை-மா-சத்திவேல்/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்துள்ளது என்பதற்கான சாட்சியாகும் &#8211; அருட்தந்தை மா.சத்திவேல்</title>
		<link>https://oruvan.com/the-semmani-mass-grave-is-evidence-that-genocide-occurred-in-sri-lanka-rev-m-satthivel/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Tue, 29 Jul 2025 13:07:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[அருட்தந்தை மா.சத்திவேல்]]></category>
		<category><![CDATA[செம்மணி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=27913</guid>

					<description><![CDATA[<p>செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்துள்ளது என்பதற்கான சாட்சியாகும். பல சான்று பொருட்களும் வெளிவந்திருப்பதன் மூலம் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவருகின்றது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மண்ணில் பிறந்த அனைத்து உயிரினங்களும் நலமே வாழ வேண்டும் என்பதோடு; இயற்கையும் சுற்றுச்சூழலும் தன் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-semmani-mass-grave-is-evidence-that-genocide-occurred-in-sri-lanka-rev-m-satthivel/">செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்துள்ளது என்பதற்கான சாட்சியாகும் &#8211; அருட்தந்தை மா.சத்திவேல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்துள்ளது என்பதற்கான சாட்சியாகும். பல சான்று பொருட்களும் வெளிவந்திருப்பதன் மூலம் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவருகின்றது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.</p>
<p>அவரால் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,</p>
<p>மண்ணில் பிறந்த அனைத்து உயிரினங்களும் நலமே வாழ வேண்டும் என்பதோடு; இயற்கையும் சுற்றுச்சூழலும் தன் நிலை கெடாத வகையில் மனிதன் வாழ வேண்டும் என்பதே அனைத்து சமயங்களில் போதனையாகும். அதனை காக்கவே புத்தரும், இயேசுவும் நீதி வாழ்வுக்கான அறைகூவல் விடுத்தனர். வலுவான மக்கள் சக்தியையும் உருவாக்கினர்.</p>
<p>ஆனால் அவர்கள் பெயரால் இன்று கட்டியெழுப்பப்பட்டுள்ள சமய நிறுவனங்கள் தான் நிலை பிறழ்ந்து இனவாத நோக்கில் இலங்கையில் செயல்படுவது சமய தர்மத்தையும், நீதியையும், உண்மையும் சமூக புதைகுழிகளுக்குள் தள்ளுவதாகவே தோன்றுகின்றது.</p>
<p>செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்துள்ளது என்பதற்கான சாட்சியாகும். இதுவரை நூற்றுக்கதிகமான மனித எச்சங்கள் முழுமையாகவும் பகுதி பகுதியாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.</p>
<p>குழந்தைகள், சிறுவர்கள் உட்பட ஆண்கள்,பெண்கள் என பலருடையதாக சந்தேகிக்கப்படும் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதோடு விசேடமாக குழந்தைகள் பாவிக்கும் பால் போத்தல், பாடசாலை சிறுவர்களின் புத்தகப் பை, உடைகள் உட்பட பல சான்று பொருட்களும் வெளிவந்திருப்பதன் மூலம் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவருகின்றது.</p>
<p>கிரிசாந்தி குமாரசாமி கொலை வழக்கில் சாட்சியான சோம ரத்தின ராஜபக்சரின் கூற்றின்படி பல நூறு பேர் அநியாயமாக கொல்லப்பட்டு குழிகளுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். அல்லது உயிரோடு குழிகளுக்குள் தள்ளி கொன்று மண்ணில் மறைத்துள்ளனர்.</p>
<p>இதற்கு நீதி கேட்டு வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல தலைநகரான கொழும்பிலும் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. அல்ஜாஸீரா போன்ற சர்வதேச ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்த நிலையில் தெற்கின் பிரதான சிங்கள ஊடகங்கள் இவ்விடயம் தொடர்பில் பேசாதிருப்பது இனவாத நோக்கில் என்பது நாம் அறிந்ததே.பட்டலந்த விடயம் அல்ஜசீரா ஊடகத்தில் வெளி கொண்டு வந்த போது இவ் ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம் செம்மணி விடயத்தில் மௌனம் காப்பது; கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதாலும் கொலையாளிகள் சிங்கள படையினர் என்பதாலுமே.</p>
<p>ஆனால் சமய அறம் காக்க உருவாக்கப்பட்ட அமைப்புகளும் நிறுவனங்களும் அதன் தலைமைத்துவங்களும் அமைதி காப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. நடைபெற்ற இனப்படுகொலை யுத்தத்துக்கும் படைவீரர்களுக்கும், ஆயுதங்களுக்கும் ஆசி வழங்கிய சமய தலைமை தலைமைகளிடமிருந்து நாம் நீதியை எதிர்பார்க முடியாது.</p>
<p>உயிர்ப்பு தின குண்டு வெடிப்புக்கும், அதில் கொல்லப்பட்டோருக்கும் நீதி கேட்டு ஜெனிவா வரை சென்றவரும் இது தொடர்பில் ஊடகங்களுக்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கின்ற வருமான கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் அவர்கள் ஒரு பால் திருமணம் மனித உரிமை சார்ந்தது அல்ல.</p>
<p>அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. சமயத்திற்கு எதிரானது என எதிர்ப்பு குரல் எழுப்பி உள்ளார்.ஆனால் இனப்படுகொலையின் அடையாளமான செம்மணி தொடர்பில் வாய் திறக்காத உள்ளமை கத்தோலிக்க திருச்சபையின் பிளவுபட்ட தன்மையையும் இனவாதத்தையுமே வெளிப்படுத்துகின்றது. அதன் அடையாளமாகவே கொழும்பு பேராயர் காட்சி தருகின்றார். இதற்கு எதிராக கத்தோலிக்க திருச்சபையின் நீதியின் மக்கள் குரல் கொடுக்க வேண்டும். அதுவே இறை நீதியாகும்.</p>
<p>அதுமட்டுமல்ல கொழும்பை தலைமையகமாக கொண்ட ஏனைய கிறிஸ்தவ அமைப்புகளும் அதன் நிறுவனங்களும் அதன் தலைமைகளும் இனப்படுகொலை தொடர்பில் கருத்து கூறாதிருப்பது இனவாத தற்காப்பு நிலையே.</p>
<p>இன, மத, பிரதேச வாதத்தை பாதுகாத்து முதலாளித்துவத்திற்கு பணி புரியும் சமய தலைமைகளும் அவர்களின் தலைமையில் இயங்கும் சமய நிறுவனங்களும் சமூகத்திற்கு சாபமே. சாதனை நீதியின் மக்கள் இதற்கு எதிராக எழும் காலம் வெகு தூரத்தில் இல்லை. ஒடுக்கப்பட்டோருக்கான நீதிக்கான மக்கள் எழுச்சி இறை நீதி சமயங்களின் வாழ்விடம்.</p>
<p>The post <a href="https://oruvan.com/the-semmani-mass-grave-is-evidence-that-genocide-occurred-in-sri-lanka-rev-m-satthivel/">செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்துள்ளது என்பதற்கான சாட்சியாகும் &#8211; அருட்தந்தை மா.சத்திவேல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கும் திட்டத்தை உடன் ஆரம்பிக்குக &#8211; அருட்தந்தை மா.சத்திவேல்</title>
		<link>https://oruvan.com/begin-the-project-to-provide-land-rights-to-the-hill-people-immediately-rev-m-satthivel/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Fri, 21 Mar 2025 08:45:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[அருட்தந்தை மா.சத்திவேல்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=15331</guid>

					<description><![CDATA[<p>மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கும் வேலைத்திட்டத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும் என சமூக செயற்பாட்டாளர் அருட்தந்தை மா. சத்திவேல் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு, ” மலையக பெருந்தொட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு புதிதாக கட்டப்படும் வீடுகள் 10 பேர்ச்சஸ் கொண்டவையாக இருக்கும் என அண்மையில் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் அமைச்சர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டதோடு அதனை நிரூபிக்கும் வகையில் பூனாகலையில் வீட்டு திட்டத்தினை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/begin-the-project-to-provide-land-rights-to-the-hill-people-immediately-rev-m-satthivel/">மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கும் திட்டத்தை உடன் ஆரம்பிக்குக &#8211; அருட்தந்தை மா.சத்திவேல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கும் வேலைத்திட்டத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும் என சமூக செயற்பாட்டாளர் அருட்தந்தை மா. சத்திவேல் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,</p>
<p>” மலையக பெருந்தொட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு புதிதாக கட்டப்படும் வீடுகள் 10 பேர்ச்சஸ் கொண்டவையாக இருக்கும் என அண்மையில் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் அமைச்சர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டதோடு அதனை நிரூபிக்கும் வகையில் பூனாகலையில் வீட்டு திட்டத்தினை ஆரம்பித்துள்ளமையை வரவேற்கின்றோம்.</p>
<p>பயனாளிகளுக்கு வீடுகள் கையளிக்கும் போது நிலத்திற்கான உரிமை பத்திரத்தையும் கையளிக்குமாறு கூறுகின்றோம்.<br />
மலையக தொழிலாளர்களுக்கான வீடுகள் என்பது தொழிலை மையப்படுத்தி தொழில்துறையை பாதுகாத்து வளர்ப்பதற்கான திட்டம் என்பதை நாம் அறிவோம்.</p>
<p>இந்நிலையில் மலையகம் எனும் தேசத்தை உடல் உயிர் தியாகத்தால் உருவாக்கி 200 வருடங்களுக்கு மேலாக பரம்பரை பரம்பரையாக அம் மண்ணிலேயே வாழ்ந்து வருபவருக்கு காணி அல்லது வீட்டுடன் காணி வழங்கும் வேலைத்திட்டம் எந்த ஒரு ஆட்சியாளர்களுக்கும் இல்லை. இது தேவையான தொழிலாளர்களை மட்டும் வைத்துக் கொண்டு ஏனையோரை அவர்களின் மண்ணிலிருந்து வெளியேற்றும் பேரினவாத மகா வம்ச சிந்தனை என்பதோடு இதனை கிளீன் செய்ய தேசிய மக்கள் சக்திக்கு இயலுமா? முயலுமா? எனவும் கேட்கின்றோம்.</p>
<p>1935 ஆம் ஆண்டின் காணி அபிவிருத்தி கட்டளை சட்டத்தின் கீழ் ஆட்சியாளர் அன்று அரச காணிகளில் வசித்த கிராமிய சிங்கள விவசாயிகளுக்கு அவர்கள் வாழ்ந்து வந்த காணிகளை அவர்களுக்கே சொந்தமாக்கியதோடு அவர்களை தேசிய உற்பத்தி துறையிலும் உள்வாங்கி அவர்களுக்கான சலுகைகளையும் மானியங்களையும் அரசு கொடுத்ததை நாம் அறிவோம்.<br />
தொடர்ந்து மிக அண்மித்த காலங்களில் ரணபிம,ஜயபிம, ஸ்வர்ண பூமி போன்ற வீட்டு திட்டங்களை வீடமைப்பு அமைச்சு நடைமுறைப்படுத்தி உள்ளது. அத்தோடு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுமய திட்டத்தின் கீழ் பல லட்சம் பேருக்கு காணி உரிமையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்ததை முழு நாடும் அறியும்.</p>
<p>மலையக பெருந்தோட்ட காணிகளை அரசு 1970களில் அரசுடமை ஆக்கிய போதும் ஆயிரக்கணக்கான ஏக்கர் தேயிலை தோட்டங்கள் கிராமிய ஏழை குடும்பங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது. அக்கணிகளை ஏற்றுக்கொண்ட ஏழைகள் ஏதோ ஒரு வகையில் அக்காணியில் தமக்கான வீடுகளை கட்டியும் காணிகளை அபிவிருத்தி செய்தும் கௌரவமான வாழ்வை தமதாக்கி கொண்டதை மலை மக்கள் அறிவர்.<br />
பகிர்ந்தளிக்கப்பட்ட தேயிலைத் தோட்டங்களில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த தொழிலாளர் குடும்பங்கள் நடுத்தெருவில் கைவிடப்பட்டதோடு பலர் வீடுகளை விட்டும் துரத்தப்பட்டனர். அக்காலத்தின் இக்கொடிய அனுபவத்தையும் மலையக மறக்கவில்லை.</p>
<p>இலங்கையின் கிழக்கில் 1940களில் ஆரம்பித்த பலவந்த நில ஆக்கிரமிப்பும் சிங்கள குடியேற்றமும் இன்று வடக்கு வரை விரிந்துள்ளது.</p>
<p>ஆனால் மலையக மண்ணில் 200 வருட வரலாற்றை தமதாக்கி மண்ணிலேயே வாழ்ந்து வரும் தொழிலாளர் வர்க்கத்திற்கும் அவர்களின் வழி வருவதற்கும் காணொளிமையை நிரந்தரமாக பெற்றுக் கொடுத்து தேசிய பொருளாதரத்தில் அவர்களை இணைக்கும் வேலைத் திட்டம் எந்த ஒரு அரசாங்கத்தாலும் முன்வைக்காதது மகாவம்சம் பேரினவாத சிந்தனையாகும்.</p>
<p>மலையக பெருந்தொட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு மட்டும் 1,50,000 அதிகமான வீட்டுத் தேவைகள் இருப்பதாக கூறப்படுகின்றது. அத்தோடு மண்ணிலேயே பிறந்து வளர்ந்து தற்போதைய லயம் எனும் வீட்டுத் தொடரிலிருந்து ஆசிரியர் தொழில் போன்ற அரசு தொழில்களுக்கும், தனியார் துறை துறைகளுக்கும் வேலைக்கு சென்று வருவதோடு இன்னும் பலர் சொந்தமாகவும் தொழில் செய்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களை அம் மண்ணிலேயே குடியிருக்க செய்ய திட்டங்கள் இல்லை என்பது அரசாங்கத்தின் மாற்றாம் தாய் மனப்பான்மையையே மையே வெளிப்படுத்துகின்றது.</p>
<p>மலையக பெருந்தோட்ட தொழிலாளருக்கு மலையகத்தில் வீடு கட்ட காணி இல்லை எனக் கூறிய ஜனாதிபதியும் அவரது அமைச்சரவையும் தற்போது கடந்த அரசாங்கம் அறிவித்த பத்து பேர்ச் காணியுடனான வீட்டு திட்டம் என்பது அன்மித்து வரும் தேர்தலை மையப்படுத்திய வேலை திட்டம் என்பதில் சந்தேகம் இல்லை.</p>
<p>மலையக மக்களுக்கு வீடு கட்டுவதற்கு காணி இல்லை; அடுக்கு மாடி வீடுகள் கட்டப்படும் என்றெல்லாம் கருத்து கூறியவர்கள் இப்போது தனியார் முதலீட்டாளர்களுக்கு மலையகத்தின் காணிகளை கொடுக்க உத்தேசித்திருப்பது மலைய மக்களை சிதைக்கும் இன்னும் ஒரு வேலை திட்டம் என்றும் அடையாளப்படுத்தலாம்.” – என்றார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/begin-the-project-to-provide-land-rights-to-the-hill-people-immediately-rev-m-satthivel/">மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கும் திட்டத்தை உடன் ஆரம்பிக்குக &#8211; அருட்தந்தை மா.சத்திவேல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்திய ஆசிரியர் யோசனை இன அழிப்பின் மற்றுமொரு அங்கம் &#8211; அருட்தந்தை மா.சத்திவேல்</title>
		<link>https://oruvan.com/the-indian-teachers-ideology-is-another-part-of-genocide-reverend-father-ma-satthivel/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Wed, 12 Mar 2025 07:19:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[அருட்தந்தை மா.சத்திவேல்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=14308</guid>

					<description><![CDATA[<p>‘இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை வரவழைத்து அவர்களுக்கு ஆசிரிய நியமனம் கொடுக்க வேண்டும் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணனின் கோரிக்கைக்கு பின்னால் மலையக கல்வி வளர்ச்சிக்கு அப்பாற்பட்ட மர்ம அரசியல் காய்நகர்த்தல் உள்ளதாகவே சந்தேகம் கொள்ளத் தோன்றுகின்றது.” – என்று சமூக செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு, ” மலையகத்தில் படித்த பட்டதாரிகள் உட்பட நூற்றுக்கணக்கான வேலையற்ற தமிழ்மொழியிலான பட்டதாரிகள், வேலையின்மை காரணமாக வீதியில் இறங்கி போராட்டம் நடத்திவருகின்றனர். இந்நிலையில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-indian-teachers-ideology-is-another-part-of-genocide-reverend-father-ma-satthivel/">இந்திய ஆசிரியர் யோசனை இன அழிப்பின் மற்றுமொரு அங்கம் &#8211; அருட்தந்தை மா.சத்திவேல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>‘இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை வரவழைத்து அவர்களுக்கு ஆசிரிய நியமனம் கொடுக்க வேண்டும் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணனின் கோரிக்கைக்கு பின்னால் மலையக கல்வி வளர்ச்சிக்கு அப்பாற்பட்ட மர்ம அரசியல் காய்நகர்த்தல் உள்ளதாகவே சந்தேகம் கொள்ளத் தோன்றுகின்றது.” – என்று சமூக செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்தார்.</p>
<p>இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,</p>
<p>” மலையகத்தில் படித்த பட்டதாரிகள் உட்பட நூற்றுக்கணக்கான வேலையற்ற தமிழ்மொழியிலான பட்டதாரிகள், வேலையின்மை காரணமாக வீதியில் இறங்கி போராட்டம் நடத்திவருகின்றனர்.</p>
<p>இந்நிலையில் மலையக கல்வித் துறை சார்ந்து அவர்களை ஆசிரியர் சேவையில் உள்வாங்கும் சமூக எழுச்சி வேலைத்திட்டத்தை முன்வைக்காது , அவர்களை புறந்தள்ளி மலையக கல்வி வளர்ச்சிக்கு இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை வரவழைத்து அவர்களுக்கு ஆசிரிய நியமனம் கொடுக்க வேண்டும் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணனின் கோரிக்கைக்கு பின்னால் மலையக கல்வி வளர்ச்சிக்கு அப்பாற்பட்ட மர்ம அரசியல் காய்நகர்த்தல் உள்ளதாகவே சந்தேகம் கொள்ளத் தோன்றுகின்றது.</p>
<p>தற்போது இந்தியாவில் இயங்கும் அதி தீவிரவாத சமய இயக்கமான சிவசேனா போன்ற அமைப்புகள் பல்வேறு முகங்களோடு மலையகத்தில் தமது கூடாரங்களை அமைத்து பலப்படுத்தி வரும் சூழ்நிலையில் இந்தியாவில் இருந்து ஆசிரியர்களை வரவழைத்து அவர்களுக்கு மலையகத்தில் ஆசிரியர் நியமனம் கொடுக்க வேண்டும் என்பது மறைமுக இந்திய அரசியல் நலன்கள் இருந்த கோரிக்கையாகவே சிந்திக்க வேண்டும்.</p>
<p>மலையகத்தில் ஏற்கனவே அடிப்படைவாத கிறிஸ்தவ சமய கட்டமைப்போடு பல இறக்குமதி செய்யப்பட்ட சமய அமைப்புகள் மலையகத்தின் பாரம்பரிய சமய பண்பாட்டு கலாச்சாரத்தை அழிக்கவும் சிதைக்கவும் பல்வேறு பலமான வேலை திட்டங்களோடு களமிறங்கியிருக்கையில் இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை இறக்குமதி செய்து மலையகத்தில் அவர்களுக்கு ஆசிரியர் நியமனம் கொடுக்க ஆலோசனை முன்வைப்பது மலையக மக்களின் கல்வியை மையப்படுத்தி அங்கு சமய மற்றும் கலாச்சார ரீதியில் இன அழிப்பினை துரிதப்படுத்தும் மாற்றுத் திட்டமாகவும் இருக்கலாம்.</p>
<p>மலையக மக்கள் இந்நாட்டின் இன்னும் ஒரு தேசிய இனமாக வரத்துள்ளதோடு இந்திய வம்சாவளியினர் என தம்மை அடையாளப்படுத்தாது மலையத் தமிழ் என்றே அடையாளப்படுத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை அரசியல் வலுப்பெற்றுள்ளது. இதனை விரும்பாத இந்திய அடிவருடி அரசியல்வாதிகளும் அவர்களின் கை கூலிகளும் மலையகத்தில் இயங்கி வரும் சுழல் நிலையில் இந்திய ஆசிரியர் நியமன கோரிக்கை என்பது மலை மக்களின் அரசியல் சிந்தனையை அழிக்கும் வேலை திட்டம்களில் ஒன்றாகவும், இன அழிப்பின் இன்னுமொரு வடிவமாகவுமே பார்க்க வேண்டி உள்ளது.</p>
<p>மலையக மக்கள் தங்களுடைய வாக்குகள் மூலம் தமக்கான நாடாளுமன்ற பிரதிநிதிகள் தெரிவு செய்யக்கூடிய வாய்ப்பு 1977 தொடர்ந்து கிடைத்தது. 1977-2024 இடையிலான காலகட்டத்தில் மலையக அரசியல்வாதிகள் தங்களுடைய அரசியலை பலப்படுத்திக் கொள்வதற்கும் தாங்கள் கட்சியையும் அதனோடு ஒட்டிய தொழிற்சங்கத் தையும் வளர்க்க எடுத்த பல்வேறு முயற்சிகளை சிந்திக்கும்போது மலையக கல்வியின் எதிர்காலம் திட்ட நலன் கருதி என்னவாக கட்சிகளையும் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பின்னால் சிறந்தது வரலாறு தங்களுடைய அரசியலையும் கட்சி அரசியலையும் வளர்த்துக் கொள்வதற்கு இவர்கள் எடுத்த முயற்சியோடு ஒப்பிடுகையில் மலையக கல்வி தொடர்பான இவர்களுடைய செயற்பாடு மிக மந்த கதியிலேயே நிகழ்ந்தது என்பதற்கு தற்போது முன் வைத்திருக்கின்ற இந்திய ஆசிரியர்களை வரவழைப்பதற்கான கோரிக்கை நல்ல உதாரணமாகும்.</p>
<p>அரச பாடத்திட்டத்திற்கு ஏற்ப அந்தந்த துறைகளில் நிறைவான அறிவு சார்ந்த ஆசிரியர்கள் மலையகத்தின் இல்லையாயின் அரச கல்வி கொள்கை மலையகத்தில் அமுலாக்கத்தில் பிழை உள்ளது. இந்த நூற்றாண்டிலும் மலையக பிள்ளைகள் கல்வியிலிருந்து தூர விலகி செல்கின்றார்கள். அல்லது கல்வியில் தேர்ச்சி அடையாதிருக்கின்றார்கள் என்று கூறுவதும் மலையக மக்களின் வாழ்வு கலாச்சாரத்திலும் பொருளாதாரத்திலும் பிழையான திட்டம் உட்புகுத்தபபட்டுள்ளது என்றே பொருள் கோடல் வேண்டும் . இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை கொண்டு வர வேண்டும் என்பது அரசியல் அறம் இன்மையின் வெளிப்பாடு எனலாம்.</p>
<p>மலையக கல்வியை பலப்படுத்தவும் வளப்படுத்தவும் மலையக படித்த பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்களை பெற்றுக் கொடுக்கவும்; மேலதிகா ஆசிரியர்களை பெற்றுக்கொள்ள வடக்கு கிழக்கு பட்டதாரிகளுக்கு நியமனங்களை உரித்தாக்கவும் அவசர வேலை திட்டத்தை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுபினர்களோடு கூட்டுச் சேர்ந்து அரசுக்கு முன்மொழிதல் நலமாகும்.” – என்றுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/the-indian-teachers-ideology-is-another-part-of-genocide-reverend-father-ma-satthivel/">இந்திய ஆசிரியர் யோசனை இன அழிப்பின் மற்றுமொரு அங்கம் &#8211; அருட்தந்தை மா.சத்திவேல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தேசிய மக்கள் சக்தி மீது அருட்தந்தை மா.சத்திவேல் பகிரங்க குற்றச்சாட்டு</title>
		<link>https://oruvan.com/reverend-father-ma-satthivels-public-accusation-against-national-peoples-power/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Feb 2025 12:45:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அருட்தந்தை மா.சத்திவேல்]]></category>
		<category><![CDATA[ஐ.நா சபை]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=9388</guid>

					<description><![CDATA[<p>ஐ.நா மனித உரிமை பேரவையில் எமக்கான உரையாடல் கதவையும் மூடுவதற்கு தேசிய மக்கள் சக்தி முயற்சிக்கின்றது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று (05.02.2025) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தேசிய மக்கள் சக்தியாகிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனாதிபதியுமாகிய அநுர குமார திசாநாயக்க யாழ் அபிவிருத்திக் குழு கூட்டம் என வடக்கிற்கு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/reverend-father-ma-satthivels-public-accusation-against-national-peoples-power/">தேசிய மக்கள் சக்தி மீது அருட்தந்தை மா.சத்திவேல் பகிரங்க குற்றச்சாட்டு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஐ.நா மனித உரிமை பேரவையில் எமக்கான உரையாடல் கதவையும் மூடுவதற்கு தேசிய மக்கள் சக்தி முயற்சிக்கின்றது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.</p>
<p>அவரால் இன்று (05.02.2025) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தேசிய மக்கள் சக்தியாகிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனாதிபதியுமாகிய அநுர குமார திசாநாயக்க யாழ் அபிவிருத்திக் குழு கூட்டம் என வடக்கிற்கு வந்து தமது பிரபல்யத்திற்கும் அரசாங்கத்தின் இருப்பிக்கும் வடக்கு மக்களின் ஆதரவு பெருகி உள்ளதாக வெளிப்படுத்தியுள்ளார்.</p>
<p>அத்தோடு நில்லாது தமிழர் தாயக அரசியலுக்கு ஆப்பு வைக்கும் முயற்சியில் இறங்கி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தமிழர்களுக்கான கதவினை மூடுவதற்கு எடுக்கும் முயற்சியை தமிழ் தேசிய அரசியல் சமூகமும், சிவில் சமூகமும், பொதுமக்களும் சரியாக உணர்ந்து இனியும் கூட்டாக செயல்படா விடின் எம்மை நாமே அழித்துக் கொண்ட வரலாற்று தவறிழைத்த மக்களாவோம்.</p>
<p>தர்மபுரி முதலாவது மிகப்பெரிய இனப்படுகொலை பேரவலம் 2009 முள்ளிவாய்க்காலில் நிகழ்வதற்கு சர்வதேச மற்றும் வயது வளர்ச்சிகள் இலங்கை பேரினவாத ஆட்சியாளர்களுக்கு துணை நின்றதை விட எம்மத்தியில் செயல்பட்ட ஒட்டுக் குழுக்களின் பங்களிப்பு மிகப் பெரியது எனலாம்.</p>
<p>அன்று எமது போராட்டத்தை பாரிய அழிவுக்குள் தள்ளி முடிவுக்குள் கொண்டு வர துணை நின்ற ஒட்டுக் குழுக்களைப் போல் இன்றும் பேரினவாத அரசின் நேரடி முகவர்களாக பல அணியினர் வெளியரங்கமாகவும், மறைமுகமாகவும் இயங்கி தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க செயல்படுவதோடு சிங்கள பௌத்த பேரினவாதத்தின் நில ஆக்கிரமிப்புக்கு துணை நின்று ஒற்றை ஆட்சிக்குள் தள்ளிவிடவும் திட்டங்களை வகுத்து செயல்படுகின்றனர்.</p>
<p>இவர்களாலேயே சுதந்திர தின பேரணி நிகழ்த்தப்பட்டது. அது தமிழர்களுக்கு எதிரான எமது அரசியலுக்கு எச்சரிக்கை விடுக்கும் போராட்டமாகவே கொள்ளல் வேண்டும். தமிழர்களின் அரசியல் அதற்கான போராட்ட வரலாறு தெரியாத அரசியல்வாதிகளும் கோமாளி அரசியல்வாதிகளும் தற்போது எம்மத்தியிலே பெருகி வருவது அல்லது பெருக வைப்பது இன்னுமொரு ஆபத்தான முடிவாகவே அமையும்.</p>
<p>சிங்கள பௌத்த பேரினவாத அரசின் நில ஆக்கிரமிப்பின் உச்சக்கட்ட வெளிபாடாகவே தையிட்டி விகாரையும் தூவியும் அமைந்துள்ளது.படையினர் சட்டத்திற்கு புறம்பாக தனியார் காணிக்குள் அத்துமீறி பிரவேசித்து உரிமையாளர்களின் அனுமதியின்றியும் அரசு அமைப்புகளில் அங்கீகாரம் இன்றியும் அதனை நிர்மானித்துள்ளதோடு அங்கு வழிபாட்டுக்கு பக்தர்கள் இல்லாத நிலையில் ஒவ்வொரு போயா தினத்திலும் பக்தர்களை இறக்குமதி செய்வது தமிழர்களின் அரசியலுக்கு விடுக்கும் அச்சுறுத்தல் எனலாம்.</p>
<p>இதன் ஆபத்தை உணராதவர்கள் விகாரைக்கு எதிரான போராட்டத்தினை தனிக்கட்சி அரசியலாக பார்த்தனர்.ஏனைய கட்சிகளும், பொதுமக்களும் வேடிக்கை பார்த்ததன் விளைவை அண்மையில் நிகழ்ந்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் காணக்கூடியதாக இருந்தது.</p>
<p>அங்கு போராட்டத்தை கொச்சைப்படுத்தியதையும், அவமானப்படுத்தியதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. நட்ட ஈடு,மாற்று காணி என அரசுக்கு ஆலோசனை கூறுவது ஒரு புறம் இருக்க பெரும்பாலானவர்கள் மௌனம் காத்தமை எமது அரசியல் அவலத்தையும் வெளிப்படுத்தியது.</p>
<p>இது இவ்வாறு இருக்க கடந்த வருட ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் மட்டுமல்ல அன்மையில் நடந்த யாழ் அபிவிருத்திக் குழு கூட்டத்தை தொடர்ந்து ஜனாதிபதியின் மக்கள் சந்திப்புகள் குறிப்பாக வல்வெட்டித்துறையில் அவருக்கான வரவேற்பு தேசிய மக்கள் சக்தியை மேலும் பலப்படுத்தியமையாக காட்டப்படுவதோடு அது தேசிய மக்கள் சக்தியுடன் மக்கள் ஒன்று படுதல் மட்டுமல்ல பெரும் தேசிய வாதத்துடன் ஒன்று படுவதாகவே தெற்கில் காட்டப்படுகின்றது. அதுவே பேச்சு பொருளாகியுமுள்ளது.</p>
<p>இதனை சாதகமாக்கிக் கொண்டே தற்போதைய அரசின் வெளிநாட்டு அமைச்சர் இம்மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு மா நாட்டுக்கு செல்ல உள்ளார். பேரவையின் கருத்துக்கள், ஆலோசனைகள் என்பவற்றை புறந்தள்ளி ஐ.நா மனித உரிமை பேரவையில் எமக்கான உரையாடல் கதவையும் மூடுவதற்கு தேசிய மக்கள் சக்தி முயற்சிக்கின்றது.</p>
<p>இந்நிலையில் தேர்தல் அரசியல் காப்பார் தமிழ் கட்சிகளின் கூட்டு மீண்டும் கனவு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இதற்கு அதிகார போட்டியும் உன் கட்சி குழப்பங்களும் காரணமாக பலமான சிவில் சமூக கட்டமைப்பும் இல்லா காலகட்டம் இது. ஒற்றை ஆட்சி அரசியல் யாப்பு என்னும் தூக்குக் கயிறும் எம் கண் முன்னே தெரிகிறது.</p>
<p>தற்போதைய அரசியல் சூழ்நிலையில் வட கிழக்கு இணைந்த தமிழர் தாயக அரசியலுக்கு எதிரான சிங்கள பௌத்த பெரும் தேசிய வாதத்தின் முகவர்களும், அரசியல் கோமாளிகளும், தமிழர் அரசியல் அபிலாசைகள் மற்றும் போராட்ட வரலாற்றின் அடிமுடி தெரியாத போலிகளாலும் தீவிரமாக மக்கள் மத்தியில் நச்சு அரசியலை பரப்பி திசை திருப்பிக் கொண்டு இருக்கின்றனர்.</p>
<p>அரசியல் சமூகமாக அடையாளப்படுத்திக் கொண்டிருப்போர் பொது வெளியில் அமைதி காப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. முன்னவர்களை விட பின்னவர்கள் ஆபத்தானவர்கள் என்பதை சுட்டிக் காட்டுவதோடு தந்தை செல்வாவின் &#8220;இனி தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்&#8221; எனும் கூற்றினை மீள நினைவில் கொள்வோம்.கூட்டு அரசியலே எமக்கான தெரிவாக அமையட்டும் என்றுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/reverend-father-ma-satthivels-public-accusation-against-national-peoples-power/">தேசிய மக்கள் சக்தி மீது அருட்தந்தை மா.சத்திவேல் பகிரங்க குற்றச்சாட்டு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
