பொதுத் தேர்தல் 2024: இன்று முதல் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யமுடியும்

OruvanOruvan

Election commission

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (04) ஆரம்பமாகவுள்ளது.

அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவுசெய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

இதன்படி, எதிர்வரும் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய எந்த ஒரு அசம்பாவிதமும் இதுவரையில் பதிவாகவில்லை எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, வேட்புமனு தாக்கல் செய்யும் வளாகம் தொடர்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தல் நவம்பர் 14ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.