மூவின மக்களுக்கும் பாரபட்சம் இன்றி சிறந்த தலைமைத்துவம்: செந்தில் தொண்டமானுக்கு மலேசிய நாடாளுமன்றம் விசேட அழைப்பு

OruvanOruvan

மலேசிய நாடாளுமன்றம் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அதற்கமைய இன்று செந்தில் தொண்டமான் மலேசியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

மூவின மக்கள் வாழும் இலங்கையில், மூவின மக்களுக்கும் பாரபட்சம் இன்றி சிறந்த தலைமைத்துவத்தை வழங்கும் தலைவர் என்ற ரீதியில் ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு மலேசிய நாடாளுமன்றத்திலிருந்து டட்டுக் ஸ்ரீ சரவணன் முருகனால் இந்த விசேட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மலேசியா பல்லின மக்கள் வாழும் நாடு. அங்குள்ள இந்தியா வம்சாவளி தமிழர்களுடன், மூவின மக்களும் ஒன்றாக வாழ தான் முன்னெடுத்த வழிமுறைகள் குறித்தும், தனது தலைமைத்துவ பண்புகள் மற்றும் தொடர் வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாடுவதற்கு கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானுக்கு டட்டுக் ஸ்ரீ சரவணன் முருகன் விசேட அழைப்பு விடுத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.