மட்டக்களப்பு கடற்கரையில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் மீட்பு: தொடரும் விசாரணை

OruvanOruvan

women dead body

மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரையில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை (8) மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்து சென்றுள்ளனர்.

உடலை மீட்டதுடன் அடையாளம் காணப்படவில்லை எனவும் நீதிமன்ற அனுமதியை பெற்று உடலை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

OruvanOruvan

women dead body