INGENUITY தேசிய விருது விழா: தேசிய மற்றும் மாகாண விருதுகளை வாகை சூடிய இளைஞர்கள்

OruvanOruvan

INGENUITY National Award Ceremony

"INGENUITY தேசிய விருது விழாவில் Up Bright Edu tech நிறுவனத்திற்கு தேசிய மற்றும் மாகாண விருதுகளை வென்று வாகைசூடியது.

வருடந்தோறும், மென்பொருள் சேவை நிறுவனங்களுக்கான இலங்கை சங்கத்தினால் (Sri Lanka Association for Software Services Companies) தேசிய ரீதியில் நடைபெறும் SLASSCOM INGENUITY விருது வழங்கல் விழாவில் Up Bright Edu tech நிறுவனமானது Best Innovative Product/ Project in E-commerce & Retails பிரிவில் Up-course Learning Management systemத்தை அறிமுகம் செய்து இரண்டு விருதுகளை வென்றது.

மாகாண ரீதியாக இப்பிரிவில் முதலாவது இடத்திற்கான விருதையும், தேசிய விருது பிரிவில் பல முன்னணி மென்பொருள் நிறுவனங்களை வென்று தேசிய விருதையும் பெற்று, கிழக்கு மாகாணத்திற்கு மகுடத்தை ஈட்டித் தந்தமை குறிப்பிடத்தக்கது.

SLASSCOM Ingenuity Awards 2024 விழாவானது கொழும்பு சங்கரில்லா ஹோட்டலில் புதன்கிழமை (19)ம் திகதி இடம்பெற்றது.

குறித்த விழாவில், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், இலங்கையில் முன்னணி மென்பொருள் நிறுவனங்கள் 10 பிரிவுகளுக்கான தேசிய மற்றும் மாகாண விருது பிரிவுகளில் போட்டி ஈட்டியமை சுட்டிக்காட்டத்தக்கது.

நாடளாவிய ரீதியில் பெயர் நாமம் பூத்த பல நிறுவனங்கள் மத்தியில் போட்டி ஈட்டி, தேசிய மற்றும் மாகாண ரீதியில் முதல் தடவையாக இரண்டு விருதுகளை வென்றமை UPBRIGHT Edu tech நிறுவனத்தின் நான்கு வருட கால முயற்சியில் உன்னத வெளிப்பாடாகும். Up Bright Edu tech நிறுவனம் இளம் தொழில் முயற்சியாளர்களான MFM.

அஸ்பர் மற்றும் ZAM.அஸாம் ஆகிய இருவரின் கனவின் வெளிப்பாட உதித்து சுமார் 3500 மாணவர்களுடன் வெற்றிப்பாதையில் பயணித்து வருகின்றனர்.

மேலும், இவ்விருதினை பெறுவதற்காக N.J.செரோன் அனாஸ் தலைமையிலான UPBRIGHT Edu tech அணியினர்களான N.M.நிப்லால், M.பவிட்சன், M.N.M.ஆஷிப், A.S. இம்தாத்மஹ்தி, S.கிஷாந்துஜன், I.J.அஹமத் மற்றும் ஏனைய குழுவினர்களின் அயராத உழைத்தப்பினை நன்றியுடன் நினைவுகூற வேண்டியது இன்றியமையாதது ஒன்றாகும்.

வர்த்தகம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பைப் பரப்புதல், ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை ஊக்குவித்தல் போன்ற செயற்திட்டங்களின் மூலம் தொழில்துறையின் வளர்ச்சிக்கு தொடர்ச்சியாக பங்களிப்பினை செய்து வரும் மென்பொருள் சேவை நிறுவனங்களுக்கான இலங்கை சங்கம் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பல்வேறு புத்தாக்க சிந்தனையாளர்களுக்காக ஆறாவது தடவையாக இவ் வருடமும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.