ஞானசார தேரருக்கு 04 வருட கடூழிய சிறைத்தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம்
பொது பலசேனவின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனையை விதித்துள்ளது.
இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இந்த கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே, 100,000 ரூபாய் அபராதமும் விதித்தார்.
2016ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூரகல பள்ளிவாசல் தொடர்பில் தெரிவித்த கருத்து தேசிய மற்றும் மத நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவித்ததாக இந்த வழக்கு தொடரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
முறைப்பாடு
இந்த வழக்கில் சாட்சி விசாரணைகள் 2022 செப்டம்பர் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே முன்னிலையில் இவ்வழக்கு விசாரணை செய்யப்பட்டது.
முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலிஇ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் பொலிஸில் முறைப்பாடொன்றை பதிவு செய்ததன் அடிப்படையில் விசாரணைகளை மையப்படுத்திஇ மேல் நீதிமன்றில் ஞானசார தேரருக்கு எதிராக சட்ட மா அதிபரால் இந்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அது கையளிக்கப்ட்ட நிலையிலேயே குறித்த வழக்கு, விசாரணை செய்யப்பட்டது.
இதன்போது, கலகொட அத்தே ஞானசார தேரர் சார்பில் சட்டத்தரணி சஞ்சய ஆரியதாச ஆஜரானார்.
கூரகல பெளத்த புராதன சின்னங்களை முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பதாகவும் கேவலமான வசனங்களைக் கொண்டு இஸ்லாமியர்கள் ஏக இறைவனாக வழி படும் அல்லாஹ்வை தூற்றும் விதமாக கருத்து வெளியிட்டு, மத உணர்வுகளை தூண்டியதாகவும் ஞானசார தேரருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பகிரங்க மன்னிப்பு கேட்க விரும்புவதாக தெரிவித்த ஞானசார
நல்லிணக்கத்தை பாதிக்கும் விதமாக நடந்துகொண்டமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி முன்னாள் தலைவரும், பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலருமான கலகொட அத்தே ஞானசார தேரர்இ அவை குறித்து தொடரப்பட்டுள்ள மேல் நீதிமன்ற வழக்கில் பகிரங்க மன்னிப்பு கேட்க விரும்புவதாக அறிவித்திருந்தார்.