ஊடகவியலாளர் மாநாட்டில் பதற்றம்: குழப்பத்தை ஏற்படுத்தியவர்கள் அதிரடிக் கைது
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் ஊடகவியலார் சந்திப்பு இன்று நடைபெற்றது.
இதன் போது, ஊடகவியலாளர் மாநாட்டில், குறுக்கிட்டு குழப்பம் ஏற்படுத்திய நால்வரையே குறுந்துவத்தை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பின் போது, திறைசேரியில் அறவிடப்படும் பணத்தில், அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு, நிதி செயலாளரிடம் குறித்த சங்கத்தின் தலைவர் மகேஷ் லசந்த கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார்.
இதில், குறைந்தபட்ச கொடுப்பனவாக ஒரு இலட்சம் ரூபாய் வழங்காவிட்டால் வேலை நிறுத்த போராட்டத்தல் ஈடுபடபோவதாக தெரிவித்துள்ளார்.
இதன்போதே, குறித்த செய்தியாளர் மாநாட்டிற்குள் புகுந்த ஒரு குழுவினரால், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டதையடுத்து, குழப்பத்தை ஏற்படுத்திய நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.