பதவி விலகியமைக்கு சிறுபான்மையினரை கைக்காட்டிய கோத்தா: கோட்டாபயவை யாரும் வௌியேற்றவில்லை; தயான் ஜயதிலக்க விமர்சனம்

OruvanOruvan

கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதி பதவியில் இருந்து துரத்தியடிக்கப்பட்டமைக்கு அவர் தான் காரணமே தவிர வேறு யாரும் அவரை வெளியேற்றவில்லை என்று தயான் ஜயதிலக்க விமர்சித்துள்ளார்.

ஜனாதிபதி பதவியிலிருந்து தான் துரத்தப்பட்டமைக்குத் தமிழர்களும், முஸ்லிம்களும் அரகலய போராட்டத்தில் பங்கேற்றமையே காரணம் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளமை தொடர்பில் கலாநிதி தயான் ஜயதிலக பதில் வழங்கியுள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றில் கோட்டாபய ராஜபக்ச எழுதியுள்ள நூல் தொடர்பான விமர்சன உரையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவித்துள்ளதாவது,

“அரகலய போராட்டத்தில் பங்கேற்றவர்கள் சிங்கள - பௌத்த கிராமப்புற விவசாயிகளின் பிள்ளைகள். கோட்டாபயவின் திட்டங்கள் காரணமாக கிராமப்புறங்களிலிருந்த படையினரின் குடும்பங்களும் உறவினர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தனர்.

அந்த வகையில் கோட்டாபயவின் பதவி இறக்கத்துக்கு அவரே தான் காரணம். அவரை யாரும் வெளியேற்றவில்லை.ஆயுதமற்ற மக்கள் சக்தியின் மூலமே அவர் வெளியேற்றப்பட்டார் ”என்றும் தயான் ஜயதிலக்க தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளார்.