பௌத்த பிக்குகள் உட்பட 33 பேர் கைது: நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை

OruvanOruvan

Protest

முன்னிலை சோஷலிச கட்சி முன்னெடுத்த ஆர்ப்பாட்ட பேரணியின் போது, கைதான 33 பேரும் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த கொம்பனித்தெரு பொலிஸார், நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் மரணப் பொறியை முறியடிப்போம், வரிச்சுமை, பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தி, சோஷலிச கட்சியின், மக்கள் போராட்ட அமைப்பு நேற்று கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்ட பேரணியை ஆரம்பித்திருந்தது.

ஆர்ப்பாட்ட பேரணி புறக்கோட்டை பகுதியை நோக்கி பயணித்த போது, அதற்கு பொலிஸாரால் தடையேற்படுத்தப்பட்டது.

அதனையடுத்து அமைதியின்மை ஏற்பட்டதுடன், ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகத்தையும் நடத்தியிருந்தது.

இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 2 பிக்குகள் உள்ளிட்ட 33 பேரை பொலிஸார் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.