Update-கண்டி பிரதான வீதியில் பாரிய பேருந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு; 30 பேர் வைத்தியசாலையில்

OruvanOruvan

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் யஹலதன்ன பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தநபர் புடலுஓயா பகுதியைச் சேர்ந்த 79 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பேராதனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கண்டி பிரதான வீதியில் பாரிய பேருந்து விபத்து - 30 பேர் வைத்தியசாலையில்

கண்டி பிரதான வீதியில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கண்டி நெல்லி கலா சர்வதேச பௌத்த நிலையத்திற்கு வழிபடுவதற்காக பூண்டுலோயா பகுதியிலிருந்து பக்தர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதாவது, பேருந்து தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த பேருந்தில் சாரதியுடன் சுமார் 30 பேர் பயணித்துள்ளதுடன், அவர்கள் அனைவரும் காயமடைந்து பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.