வெடுக்குநாறிமலையில் பொலிஸார் அத்துமீறல்: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை

OruvanOruvan

Police Threating

வவுனியா – வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் நடைபெற்ற அத்துமீறல்களுக்கு, அரசாங்கத்திற்குப் பாரிய அழுத்தத்தை பிரயோகிக்கவும், சர்வதேச கவனத்தை ஈர்த்து இந்தப் பிரச்சனைக்கு தீர்வைப் பெறவும், உரிய தீர்வு கிடைக்கும் வரை நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணிக்கும் தீர்மானத்தை எடுத்து உதவுமாறு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

எத்தனையோ கண்டன அறிக்கைகள் வெளியிட்டும், கவனயீர்ப்புக்கள் நடைபெற்ற போதும் வவுனியா, வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விவகாரத்திற்கு தீர்வு கிடைக்கவில்லை என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் சார்பில், தலைமை ஒருங்கிணைப்பாளர் அகத்தியர் அடிகளார் வருத்தம் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கோரிக்கை கடிதங்களையும் அனுப்பி வைத்துள்ளார்.