அமெரிக்கா மீது பயத்தில் உள்ள கோட்டா: புத்தகத்தில் உண்மைகளை மறைத்துவிட்டார்
![Oruvan](https://gumlet.assettype.com/oruvan/2024-03/bbb92d9f-9a12-4bc0-8dbe-43ffe86202bc/New_Project__70_.jpg?format=webp&w=800&q=70)
![Oruvan](/site-related-assets/no-image.webp)
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச. தாம்மை பதவியில் இருந்து அகற்ற முன்னெடுக்கப்பட்ட சதித் திட்டம் பற்றிய நூல் ஒன்றை கடந்த வியாழக்கிழமை வெளியிட்டிந்தார்.
இந்த நூல் தென்னிலங்கை அரசியலில் பேசுபொருளாக உள்ளதுடன், சில உண்மைகள் நூலில் மறைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கோட்டாபய பதவியில் இருந்து அகற்றும் சதித்திட்டத்தை அவரின் அருகில் இருந்த நெருங்கிய நண்பர்களே மேற்கொண்டதாக கடந்தகாலத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இந்த விடயம் தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ள ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, அமெரிக்கா மீதான அச்சத்தால் சில விடயங்களை கோட்டாபய ராஜபக்ச, இந்த நூலில் மறைத்துள்ளதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாவது,
கோட்டாவை அமெரிக்கா இயக்குவதாக அவர் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. சவேந்திர சில்வா, கமால் குணரத்ன உட்பட அவரது நெருங்கிய நண்பர்கள் அமெரிக்காவின்நிகழ்ச்சி நிரலையே முன்னெடுக்கின்றனர் என்பதையும் அவர் அறியாது நம்பிக்கையுடன் செயல்பட்டிருந்தார்.
இவர்கள் மீது கோட்டா இன்னமும் அச்சத்திலேயே உள்ளார். அவர் அமெரிக்கா மீதும் பயத்தில் இருக்கிறார். அதனால் புத்தகத்தில் பல உண்மைகளை குறிப்பிடவில்லை.” எனவும் உதயங் வீரதுங்க தெரிவித்துள்ளார்.