வெடுக்குநாறிமலையில் அரங்கேறிய பொலிஸ் அராஜகம் - நல்லூரில் வெடித்தது போராட்டம்: ஒன்றுகூடிய மதத் தலைவர்கள்

OruvanOruvan

வவுனியா வடக்கு - வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் அரங்கேறிய பொலிஸ் அராஜகத்தைக் கண்டித்து யாழ்ப்பாணம் - நல்லூரில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு அகத்தியர் அடிகளாரின் அழைப்பின் பேரில் நல்லை ஆதீனம் முன்பாக மாலை 4 மணிக்குப் போராட்டம் ஆரம்பமானது. .

இந்தப் போராட்டத்தில் மதகுருமார், சமயத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

மகா சிவராத்திரி பூஜையின்போது வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்துக்கு வழிபடச் சென்றவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட அட்டூழியங்களைக் கண்டித்தும், கைது செய்யப்பட்ட 8 பேரை உடன் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

OruvanOruvan

OruvanOruvan

OruvanOruvan