சாந்தனின் மரணத்தில் சந்தேகமா?: சட்டத்தரணி புகழேந்தி ஒருவன் செய்தி சேவைக்கு விசேட செவ்வி

OruvanOruvan

சாந்தனின் மரணம் கல்லீரல் பாதிப்பினால் ஏற்பட்ட இயற்கையான மரணம் என அவரது சட்டத்தரணி புகழேந்தி “ஒருவன்” செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

சாந்தனின் மரணம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் சந்தேகம் வெளியிட்டுவரும் நிலையில் சட்டத்தரணி புகழேந்தி விளக்கமளித்துள்ளார்.

உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த சாந்தன், சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாந்தனின் மரணம் படுகொலை என தாம் கூறியதாக வெளிவரும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும், தாம் அத்தகைய ஒரு கருத்தினை தெரிவிக்கவில்லை எனவும் சட்டத்தரணி புகழேந்தி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சாந்தனின் பூதவுடல் நாளை வியாழக்கிழமை அல்லது நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்படும் எனவும் சட்டத்தரணி புகழேந்தி குறிப்பிட்டுள்ளார்.