கொழும்பு - ஜம்பட்டாவீதி துப்பாக்கிச் சூடு: மொஹமட் ரில்வான் வைத்தியசாலையில் அனுமதி, பொலிஸார் விசாரணை

OruvanOruvan

கொழும்பு, ஜம்பட்டாவீதி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று மதியம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

மொஹமட் ரில்வான் என்ற 55 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் பிரபல போதைப்பொருள் வியாபாரியான புகுடுகண்ணாவின் நெருங்கிய உறவினர் என்பது தெரியவந்துள்ளது.

இவர் ஹேனமுல்ல மெத்ஸந்த செவன வீட்டுத் தொகுதியில் வசிப்பவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.

புபுகுடுகண்ணாவுக்கும் ரெமோஷன் என்பவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறே துப்பாக்கிச் சூட்டுக்கு காணரம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இன்று (25) பிற்பகல் 1.45 மணியளவில் ஜம்படவீதிய பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள நியூஹாம் சதுக்கத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதில் காயமடைந்த ரில்வான் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் செல்வது அருகில் உள்ள சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.