கொள்கலனில் மறைந்து வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற தமிழர்கள்: நாடு நாடாக அழைத்துச் சென்ற அதிகாரிகள், இலங்கைக்கு நாடு கடத்தியது சீனா
![Oruvan](https://gumlet.assettype.com/oruvan/2024-02/028d1190-12a6-40fb-9ae4-4b7de4d87c63/colombo.jpg?format=webp&w=800&q=70)
![Oruvan](/site-related-assets/no-image.webp)
கொள்கலனொன்றில் மறைந்திருந்து மலேசியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற போது சீனாவில் கைது செய்யப்பட்ட இரு இலங்கையர்களும் ஒரு வருடத்தின் பின்னர் நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று (24) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாடு கடத்தப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு சந்தேக நபர்களும் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் ஏற்றப்பட்ட வெற்று கொள்கலனில் மறைந்திருந்து மலேசியாவிற்கு தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.
கடந்த ஜனவரி 30, 2023 அன்று, சம்பந்தப்பட்ட இருவரும் மலேசியா செல்வதற்காக கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த "மெர்க்ஸ் யூனிகார்ன்" கப்பலில் ஏற்றப்பட்ட வெற்று கொள்கலனுக்குள் இரகசியமாக நுழைந்தனர்.
ஆனால் குறித்த கப்பல் மலேசியாவை வந்தடைந்த போது, கொள்கலனில் மறைந்திருந்த இரு சந்தேக நபர்களையும் ஏற்க மறுத்ததால், சந்தேக நபர்களை பல நாடுகளுக்கு அழைத்துச் சென்ற கப்பலின் அதிகாரிகள் இறுதியாக சீனாவிற்கு வந்துள்ளனர்.
இருவரையும் சீன அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
26 வயதான ராஜேந்திரன் மற்றும் 39 வயதான ஜெயக்குமார் தருமராசா ஆகிய இரு இலங்கையர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இன்று காலை 05.01 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-867 மூலம் சீனாவின் ஷாங்காய் நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இருவரும் அழைத்து வரப்பட்டனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பின்னர், கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்களம், ஆட்கடத்தல் மற்றும் ஆட்கடத்தல் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டு தற்போது கொழும்பு கிருலப்பன பிரதேசத்தில் உள்ள பிரதான அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.