இலங்கையில் பகவத் கீதை மகோற்சவம்: ஹரியானா மாநில குருப்பிரிவு தீர்மானம்

OruvanOruvan

இந்து பக்தர்களின் புனித நூலாகக் கருதப்படும் ஸ்ரீமத் பகவத் கீதை தொடர்பாக சமய நிகழ்வுகள் மற்றும் மதிப்பளித்தலை வழங்குவதற்காக இந்தியாவின் ஹரியானா மாநில குருப்பிரிவு அபிவிருத்தி சபையால் வருடாந்தம் பகவத்கீதை மகோற்சவம் நடாத்தப்படும்.

அண்மைய ஆண்டுகளில குறித்த மகோற்சவம் வெளிநாடுகளில் நடாத்தப்பட்டுள்ளதுடன், 2024 ஆம் ஆண்டின் சர்வதேச ஸ்ரீமத் பகவத்கீதை மகோற்சவத்தை இலங்கையில் நடாத்த முன்மொழியப்பட்டுள்ளது.

அதற்கமைய, இந்தியாவின் ஹரியானா மாநில குருப்பிரிவு அபிவிருத்தி சபையின் நிதியனுசரணையுடன் 2024.03.01 தொடக்கம் 2024.03.03 வரை தாமரைத் தடாக வளாகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற உள்ளது.

இதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சரா விவகார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த நிலையில், பகவத் கீதை மகோற்சவ நிகழ்வை நடத்துவதற்காக தாமரை தடாகத்தை தயார்படுத்தும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சரா விவகார அமைச்சு விசேட குழுவொன்றை நியமிக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிய வருகிறது.