Exclusive - சஜித் அணியின் முக்கிய ஒப்பந்தம் கைச்சாத்தாகின்றது: மனோ எம்.பி. தகவல்

OruvanOruvan

Mano Ganesan Member of Parliament

ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைமைகளுக்கு இடையிலான முதல் கட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் எதிர்வரும் 14 ஆம் திகதி கைச்சாத்திடவுள்ளது.

ஒருவன் செய்தி சேவைக்கு வழங்கிய விசேட நேர்காணலில் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் இதனை தெரிவித்தார்.

இதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விரைவில் இலங்கையில் தேசிய தேர்தல்கள் இடம்பெறும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், கொழும்பு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்தப் பின்னணியிலேயே, ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைமைகளுக்கு இடையிலான முதல் கட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.