இலங்கையர்கள் அறிவாற்றலில் பின்தங்கியவர்கள்: விமர்சித்துள்ள நாமல்

OruvanOruvan

Namal Rajapaksha

இலங்கை மக்கள் அறிவாற்றலில் பின்தங்கியிருப்பதாக நாமல் ராஜபக்‌ஷ விமர்சித்துள்ளார்.

பொதுஜன பெரமுண கட்சியின் கோட்டை தேர்தல் தொகுதி ஆதரவாளர்களுடனான சந்திப்பில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்

அங்கு தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர்,

“நாங்கள் உருவாக்கியவற்றைப் பயன்படுத்தும் திறமை கொண்டவர்களை உருவாக்க எங்களுக்கு முடியாமல் போய்விட்டது.

அவற்றைப் பயன்படுத்தும் ஆற்றலின்மை காரணமாகவே பொதுமக்கள் தரப்பில் இருந்து எங்கள் மீதான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன” என நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.