மாநாட்டை உடன் நடத்துங்கள்: வைபவரீதியாக பதவியேற்க வேண்டும், சிறீதரனுக்கு சுமந்திரன் கடிதம்
இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாட்டை விரைவில் நடத்துமாறு அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள சி.சிறீதரனுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளவர் வைபவ ரீதியாக பதவியேற்பது மிக முக்கியமானது எனவும் அவர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.