இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக்கிரியைகள் இன்று: 2 மணி வரை அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம்
![Oruvan](https://gumlet.assettype.com/oruvan/2024-01/2f352d85-62eb-4f8e-ae14-40b751a4d91e/image_7a7ba479e3.jpg?format=webp&w=800&q=70)
![Oruvan](/site-related-assets/no-image.webp)
Sanath Nishantha Funeral
உயிரிழந்த ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் ராஜதந்தலுவ திருக்குடும்ப தேவாலய மயானத்தில் நடைபெறவுள்ளது.
அவரது உடல் ஆராச்சிக்கட்டுவில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளதுடன் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அதிக எண்ணிக்கையிலான மக்கள் வீட்டுக்கு அருகில் கூடியுள்ளனர்.
ஆராச்சிக்கட்டுவில் உள்ள அவரது வீட்டுக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தற்காலிக மண்டபத்திலேயே உடல் வைக்கப்பட்டுள்ளது.
சனத் நிஷாந்தவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பிரதேச மக்கள், அரசியல்வாதிகள் என பலர் வந்த வண்ணம் உள்ளனர்.
48 வயதான சனத் நிஷாந்த நான்கு பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.