மூன்று உயிர்களை காவு கொண்ட நாரம்மல்ல விபத்து: மேலும் ஒருவர் படுகாயம்

OruvanOruvan

Accident

நாரம்மல - கிரியுல்ல பிரதான வீதியில் கிவுல்கல்ல வளைவுக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த நபர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து முச்சக்கர வண்டியொன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதியதில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தின் போது முச்சக்கரவண்டியில் நான்கு பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

அத‍ேநேரம் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

OruvanOruvan

Accident