சோமாலிய கடற்கொள்ளையர்களால் இலங்கை மீனவர்கள் கடத்தல்: உறுதிப்படுத்திய அரசாங்கம்

OruvanOruvan

இலங்கையின் மீன்பிடி இழுவை படகொன்று சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

திணைக்களத்தின் பேச்சாளரின் கூற்றுப்படி, இழுவைப்படகும் 6 இலங்கை மீனவர்களும் அரபிக்கடலில் வைத்து இவ்வாறு சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

சிலாபம் திகோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 12ஆம் திகதி லொரென்சோ புத்தா - 4 என்ற பல இழுவை படகில் இவர்கள் ஆழ்கடல் மீன்பிடிக்குச் சென்றுள்ளனர்.

இலங்கை கடல் எல்லையில் இருந்து சுமார் 1,160 கடல் மைல் தொலைவில் இவ்வாறு இழுவை படகு கடத்தப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட மீனவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கடற்றொழில் திணைக்களத்தின் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.