அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது: படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன
![Oruvan](https://gumlet.assettype.com/oruvan/2024-01/fb6f55b1-7ead-4d6c-9cd4-cf479a598384/23_63ec78d609b2e.png?format=webp&w=800&q=70)
![Oruvan](/site-related-assets/no-image.webp)
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பினுள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்ட ஆறு தமிழக மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது மீன்பிடியில் ஈடப்பட்ட மீனவர்களின் படகுகளும் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களை கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.