பெலியத்த பகுதியில் துப்பாக்கிச்சூடு: அபே ஜன பல கட்சி தலைவர் உள்ளிட்ட ஐவர் உயிரிழப்பு
![Oruvan](https://gumlet.assettype.com/oruvan/2024-01/480048f2-0100-4ec1-9f78-75f0a4a98223/gun_shoot.jpg?format=webp&w=800&q=70)
![Oruvan](/site-related-assets/no-image.webp)
Gun shoot
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்தை – கஹவத்த வெளியேறும் பகுதிக்கு அருகில், இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
மாத்தறை - பெலியத்த பகுதியிலேயே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அபே ஜன பல கட்சி தலைவர் சமன் பெரேராவும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
![Oruvan](https://gumlet.assettype.com/oruvan/2024-01/8b8aaca5-d274-476b-a850-53935e556903/Saman_Perera.jpg?format=webp&w=1000&q=80)
![Oruvan](/site-related-assets/no-image.webp)
saman perera
டிபெண்டர் ரக வாகனமொன்றில் பயணித்தவர்களை இலக்கு வைத்து கெப்ரக வாகனமொன்றில் பிரவேசித்தவர்கள் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தார்.