மாலைதீவுக்கான உயர்ஸ்தானிகர் நியமனம்: ஐந்து நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி

OruvanOruvan

Committee on High Posts

உயர்ஸ்தானிகர் ஒருவர் உட்பட ஐந்து புதிய நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளதாக பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மாலைதீவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக பி.ஆர்.எஸ்.குணவர்தனவை நியமிப்பதற்கு உயர் பதவிகள் பற்றிய பாராளுமனற குழு அனுமதி வழங்கியது.

அத்துடன், அமைச்சரவை அந்தஸ்தற்ற அரச பெருந்தோட்ட தொழில்முயற்சி மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளராக கலாநிதி எம்.எம்.எஸ்.எஸ்.பி.யாலேகமவை நியமிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக எஸ்.சி.ஜே.தேவேந்திரவின் நியமனத்துக்கும் உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதேநேரம், இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் எம்.ஏ.ஆர்.எம்.பெர்னாந்து மற்றும் அரச ஈட்டு முதலீட்டு வங்கியின் தலைவராக எம்.ஜே.சூசைதாசன் ஆகியோரின் நியமனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.