மாத்தறை சிறையில் மர்ம நோய்: ஒருவர் உயிரிழப்பு 8 கைதிகளுக்கு ஒரே விதமான நோய் அறிகுறிகள்

OruvanOruvan

Srilanka Prison Matara

மாத்தறை சிறையில் சிறை வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், 8 கைதிகளுக்கு ஒரே விதமான நோய் அறிகுறிகள் தென்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதனடிப்படையில், மூளை காய்ச்சலாக இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிடுகின்றது.

இந்நிலைமையின் அடிப்படையில் மாத்தறை சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ள புதிய கைதிகளை நீதிமன்றங்களினால் அகுனகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் உத்தரவின் பேரில், மாத்தறை சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்ட புதிய கைதிகளை அங்குனுகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், சுகாதார பரிந்துரைகளின்படி பார்வையாளர்களை அனுமதிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.