குர்ஆன் மதரஸாவில் சிறுவனின் சடலம் மீட்பு; மதரஸா நிர்வாகி கைது: மாணவனின் மரணம் கொலையாகவே இருக்கும். மதர்ஸாவின் நிர்வாகி மீது ஏற்கனவே பல பொலிஸ் முறைப்பாடுகள் இருக்கின்றன என தெரிவித்து பிரதேச மக்கள் குழப்பத்தில் ஈடுப்பட்டனர்.

OruvanOruvan

Arrest

சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள குர்ஆன் மதரஸாவில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது.

இதனையடுத்து உயிரிழந்த சிறுவனின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்து நேற்று இரவு பிரதேச மக்கள் மதரஸாவை முற்றுகையிட்டனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயதுடைய எம்.எஸ்.முஷாப் எனும் மாணவன் குர்ஆன் மதரஸா மலசலக்கூடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, குறித்த மாணவனின் மரணம் தற்கொலை அல்ல, கொலையாகவே இருக்கலாம் என்றும், அந்த மதர்ஸாவின் நிர்வாகி மீது ஏற்கனவே பல பொலிஸ் முறைப்பாடுகள் இருக்கின்றன என தெரிவித்து பிரதேச மக்கள் குழப்பத்தில் ஈடுப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மதரஸாவின் நிர்வாகியை கைது செய்தனர்.

மேலும் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.