வவுனியா செட்டிகுளத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் படுகொலை: சம்பவ இடத்தில் மூன்று கத்திகள் மீட்கப்பட்டுள்ளதுடன், 5 பவுண் பெறுமதிமிக்க தங்கநகையும் காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

OruvanOruvan

வவுனியா செட்டிகுளம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரை படுகொலை செய்த சம்பவமொன்று இன்று பதிவாகியுள்ளது.

செட்டிகுளம் பிரதான வீதியில் குறித்த சம்வத்தில் உயிரிழந்த தம்பதிகளின் மகன் வியாபார நிலையமொன்றினை நடத்தி வந்துள்ளார்.

வியாபார நிலையத்திற்கு பின்னால் உள்ள வீட்டில் குறித்த இருவரும் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், வழமைப்போன்று வியாபார நிலையத்தை திறந்த வேளையில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

செட்டிகுளம் பகுதியைசேர்ந்த 72 வயதுடைய பசுபதி வர்ணகுலசிங்கம் மற்றும் 68 வயதான கனகலட்சுமி என்ற இருவருமே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் மூன்று கத்திகள் மீட்கப்பட்டுள்ளதுடன், 5 பவுண் பெறுமதிமிக்க தங்க நகையும் காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.