அனைத்து கட்சி தலைவர்களுக்கும் ஜனாதிபதியின் அறிவிப்பு: ஜூலை 26ஆம் திகதி நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டின் போது 13 ஆவது திருத்தம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முன்மொழிவுகளையும் யோசனைகளையும் ஓகஸ்ட் 15ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அனைத்து கட்சி தலைவர்களுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கடந்த ஜூலை 26ஆம் திகதி நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டின் போது 13 ஆவது திருத்தம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.