நெற்கதிர்கள் கறுப்பானமைக்கு நிவாரணம் வழங்குவதற்கான இயலுமை இல்லை: குறித்த பகுதிகளில் 3500க்கும் அதிகமான விவசாய செய்கை பாதிக்கப்பட்டடுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

OruvanOruvan

Rice bran has no ability

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி, களுவாஞ்சிகுடி, பளுகாமம், வாழைச்சேனை, பட்டியடி உள்ளிட்ட பகுதிகளில் நெற் கதிர்கதிர்கள் கறுப்பு நிறமாக மாறியமைக்கு நிவாரணம் வழங்குவதற்கான இயலுமை இல்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதிகளில் 3500க்கும் அதிகமான விவசாய செய்கை பாதிக்கப்பட்டடுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதிக வெப்பம் மற்றும் மைட்டா எனப்படும் சிற்றுண்ணியின் தாக்கமே நெற்கதிர் கறுப்பு நிறமாக மாறுவதற்கு காரணம் எனவும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

அரசாங்கம் நிதி வழங்கும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.