ருதுராஜிடம் தோனி கூறிய ஒற்றை வார்த்தை: ஓராண்டின் பின் நடந்தது என்ன?

OruvanOruvan

இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட்டில் வெற்றிகரமான அணியாக வலம் வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

அதற்கு ஐபிஎல் தொடர் 2008இல் தொடங்கப்பட்டதிலிருந்து சென்னை அணியின் தலைவராகச் செயல்பட்டு வந்த மகேந்திர சிங் தோனி முக்கியமானதொரு காரணம்.

அவருக்கு 42 வயதாகிவிட்ட நிலையில், 17வது ஐபிஎல் பருவத்தில் சென்னை அணியை ருதுராஜ் கெய்க்வாட், வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை அணியின் தலைவராக நியமிக்கப்பட்டதில் தமக்கு வியப்பில்லை என ருதுராஜ் குறிப்பிட்டார்.

“நான் எதையும் மாற்ற வேண்டிய தேவையிராது என நினைக்கிறேன். தலைமைப் பதவி குறித்து கடந்த ஆண்டே அவர் சமிக்ஞை எனக்கு வியப்பில்லை. ‘தயாராக இரு’ என்று மட்டும் அவர் சொல்லி இருந்தார்.

“சென்னை அணியில் இருப்பது அற்புதமான உணர்வு. இங்கிருந்துதான் எனது ஐபிஎல் பயணம் தொடங்கியது. டோனியின் நம்பிக்கையைப் பெற்று, தலைமைப் பொறுப்பில் அமர்த்தப்பட்டு இருப்பதை பெரிய விஷயமாகக் கருதுகிறேன்,” என்று ருதுராஜ் கூறினார்.