சூடு பிடிக்கும் இலங்கை - பங்களாதேஷ் போட்டிகள்: ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்
சில்ஹெட்டில் நடந்த டி20 தொடரை இலங்கை வென்றதன் பின்னர், இன்றைய தினம் இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் சட்டோகிராமில் இன்று ஆரம்பமாகிறது.
சூடுபிடிக்கும் இரு அணிகளுக்கும் இடையிலான மோதல்
மூன்றாவது போட்டியின் போது, நுவான் துஷாராவின் ஹெட்ரிக் சாதனை இரு அணிகளுக்கும் இடையிலான முறுகல் நிலையினை மீண்டும் தோற்றுவித்துள்ள நிலையில், ஒருநாள் தொடர் சூடு பிடிக்கவுள்ளது.
சில்ஹெட் லெக்கில், இரு தரப்புக்கும் இடையில் இரு தரப்புக்கும் இடையிலான மோதல் நிலை உச்சம் பெற்ற சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.
ஷோரிஃபுல் இஸ்லாம் கடந்த ஆண்டு உலகக் கிண்ணத்தில் அஞ்சலோ மெத்தியூஸின் காலக்கெடு முடிந்த சைகையைப் பிரதிபலிப்பதன் மூலம் வாக்கு வாதம் சூடுபிடிக்க தொடங்கியது.
அதற்கு பதிலடியாக டி20 தொடரினை 2:1 என்ற கணக்கில் வெற்றி கொண்ட இலங்கை, அதே சைகையினை காண்பிடித்து கிண்ணத்துடன் வெற்றியை கொண்டாடியது.
இரண்டாவது ஆட்டத்தில் மூன்றாவது நடுவர் சௌமியா சர்க்காரின் ஆட்டமிழப்பினை வழங்க மறுத்ததும், மூன்றாவது போட்டியின் போது இலங்கை அணி வீரர்களுக்கும் பங்களாதேஷ் வீரர் டவ்ஹித் ஹிரிடோய்க்கும் இடையேயான மோதல் மேலும் பதற்றத்தை தூண்டியது.
எனினும், உணர்ச்சிகள் அதிகமாக வெளிப்படக் கூடிய போட்டியில் இரு அணிகளும் தங்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும் மிகவும் அவசியமாகிறது.
சொந்த மண்ணில் பங்களாதேஷின் நிலை
பங்களாதேஷ் வரலாற்று ரீதியாக தனது சொந்த மண்ணில் பல ஒருநாள் போட்டிகளை இழக்கவில்லை.
எனினும், ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து தொடர்ச்சியான தொடர் தோல்விகளை அவர்களுக்கு வழங்கியுள்ளன.
இறுதியாக பங்களாதேஷ் 2011 ஆம் ஆண்டு சொந்த மண்ணில் தொடர்ச்சியாக மூன்று ஒருநாள் தொடர்களை இழந்தது.
இந் நிலையில் டி20 தொடரின் தோல்வியில் மீளெழுவதற்கு பங்களாதேஷ் அணி, சொந்த மண்ணில் இலங்கையை ஒருநாள் தொடரில் தோற்கடிக்க வேண்டும்.
பங்களாதேஷின் துடுப்பாட்டம் - பந்து வீச்சு
சௌமியா சர்க்கார் டி20 போட்டிகளில் களில் தனது பழைய திறனை வெளிக் காட்டுவதன் மூலம் ஒருநாள் தொடரில் பிரகாசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பி.பி.எல். தொடரில் ஹிரிடோய் மற்றும் தன்சித் ஹசன் ஓட்டங்களை எடுத்தனர்.
அதே சமயம் மஹ்முதுல்லா உலகக் கிண்ணத்தில் இருந்து சீராக திறனை வெளிப்படுத்தி வருகிறார்.
மேலும் முஷ்பிகுர் ரஹீம் பி.பி.எல். தொடரில் பிரகாசித்துள்ளார்.
தஸ்கின் அஹம் மற்றும் ஷோரிபுல் ஆகியோர் டி20 போட்டிகளில் சிறப்பாக பந்து வீசினர், ஷாகிப் அல் ஹசன் இல்லாத நிலையில் மெஹிடி ஹசன் மிராஸ் முன்னணி ஆல்ரவுண்டராக இருப்பார், மேலும் ரிஷாத் ஹொசைன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
தலைவராக குசல் மெண்டிஸின் பங்களிப்பு
குசல் மெண்டிஸின் தலைமைப் பதவியில் இலங்கை அணி இன்னும் பிரகாசிக்கவில்லை.
மோசமான உலகக் கிண்ணத் தொடரின் போது அவர் 13 போட்டிகளுக்கு தலைமை தாங்கி, இரண்டு ஆட்டங்களில் மாத்திரம் அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.
இதனால் சாம்பியன்ஸ் டிராபிக்கு இலங்கை தகுதி பெறவும் முடியவில்லை.
இந் நிலையில், சிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர் வெற்றிகளையும், பங்களாதேஷுக்கு எதிரான டி20 போட்டிகளில் முன்னேற்றத்தயைும் அடைந்துள்ள இலங்கை மெண்டீஸ் தலைமையில் இன்று களம் காணுகிறது.
களத்தில் இரு தரப்பினரும் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்த காத்துள்ளமையினால், மெண்டிஸ் தனது பக்கத்தை எவ்வாறு கையாளுகிறார் என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.
ஒழுக்கத்தின் அடிப்படையில் கடந்த காலத்தை கடந்த வீரர் என்பதால் அவர் அணியை எவ்வாறு நிர்வகிக்கிறார் என்பது குறித்து நிச்சயமாக கேள்வி இருக்கும்.
இலங்கையின் தொடர் வெற்றிகள்
பங்களாதேஷுக்கு எதிரான உலகக் கிண்ண போட்டிகளுக்குப் பிந்தைய தொடரை இலங்கை வெல்லும் என நம்புகிறது.
இந்த ஆண்டு ஏற்கனவே நடந்த ஒருநாள் தொடரில் சிம்பாப்வேயை 2-0 என்ற கணக்கிலும், ஆப்கானிஸ்தானை 3-0 என்ற கணக்கிலும் வீழ்த்தியுள்ளது.
இந்தியாவுடனான மந்தமான தோல்விகளுக்கு பின்னர், இலங்கை அணி தற்சமயம் சீரான பதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது.
பத்தும் நிஸங்கவின் வருகை
பத்தும் நிஸ்ஸங்கவின் தொடை காயத்திலிருந்து திரும்பியுள்ளது இலங்கைக்கு ஒரு ஊக்கமாக அமையும்.
அவர் சமீபத்தில் ஒருநாள் தொடரில் இரட்டை சதம் அடித்த இலங்கையின் முதல் துடுப்பாட்ட வீரர் ஆனார்.
டி20 போட்டிகளில் தொடர் நாயகன் விருதை வென்ற மெண்டிஸும் நல்ல போர்மில் உள்ளார்.
இலங்கையும் பங்களாதேஷுக்கு சமநிலையான பந்துவீச்சைக் கொண்டுவந்துள்ளது.
உலகக் கிண்ணப் போட்டியின் போது காயமடைந்தத லஹிரு குமார அணிக்கு திரும்பியுள்ளார். வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லலகே, டில்ஷான் மதுஷங்க உள்ளிட்ட பலர் வீரர்களும் ஒருநாள் அணியில் உள்ளனர்.