ரிஷப் பண்டின் மீள் வருகை குறித்து பிசிசிஐ இன் அறிவிப்பு: உலகின் முக்கிய விளையாட்டு செய்திகள் ஒரே பார்வையில்...
ரிஷப் பண்டின் மீள் வருகை குறித்து பிசிசிஐ இன் அறிவிப்பு
காயம் காரணமாக ஓய்விலிருக்கும் ரிஷப் பண்ட் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத்தீவுகளில் ஆரம்பமாகவுள்ள டி20 உலகக் கிண்ணத்தின் போது அணிக்கு திரும்புவார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் ஜெய் ஷா (Jay Shah) குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது டெஸ்ட்டில் 3 விக்கெட்டுகளால் வென்ற ஆஸி. தரவரிசையில் முன்னேற்றம்
கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா, நியூஸிலாந்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலியா முழுமையாக கைப்பற்றியதுடன், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது.
முத்தரப்பு தொடரில் விளையாடவுள்ள இலங்கை U-19 மகளிர் அணி
இலங்கை 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணி அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து பங்கேற்கும் முத்தரப்பு தொடரில் விளையாடும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்று (11) அறிவித்துள்ளது. அதன்படி, மூன்று அணிகளும் டி20 மற்றும் 50 ஓவர் போட்டிகள் கொண்ட முத்தரப்பு தொடரை மார்ச் மற்றும் ஏப்ரல் 2024 இல் விளையாடும்.
இந்தியன் வெல்ஸ்: நான்காம் சுற்றுக்கு முன்னேறிய இகா ஸ்வியாடெக்
உலகின் நம்பர் 1 வீராங்கனையான போலாந்தின் இகா ஸ்வியாடெக் (Iga Swiatek) செக் நாட்டைச் சேர்ந்த லிண்டா நோஸ்கோவாவை 6-4 6-0 என்ற கணக்கில் தோற்கடித்து இந்தியன் வெல்ஸில் நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா முதலிடம்
ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா 122 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை 4 இற்கு 1 என்ற அடிப்படையில் வெற்றிகொண்டதைத் தொடர்ந்து இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த தரவரிசையில் 117 புள்ளிகளுடன் அவுஸ்திரேலிய அணி இரண்டாவது இடத்திலும் 111 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன.