மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறீர்களா?: அப்போ இந்த உணவுகளை உண்ணுங்கள்!
தற்போது பெரும்பாலானோருக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினைகளுள் ஒன்றுதான் மன அழுத்தம்.
மன அழுத்தத்துக்கும் நாம் உண்ணும் உணவுக்கும் இடையில் மிகப்பெரிய தொடர்பு இருக்கிறது.
அந்த வகையில் நாம் எப்பொழுதும் மன அழுத்தத்தைத் தூண்டக்கூடிய உணவுகளை தவிர்க்க வேண்டும்.
அதேநேரத்தில் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய பெர்ரி பழங்கள், நட்ஸ் வகைகள் போன்றவற்றை உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அந்த வகையில் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் உணவுகள் என்னவென பார்ப்போம்.
பால் பொருட்கள்
பி விட்டமின்கள், டிரிப்டோபேன், மெலடோன் போன்ற பால் சார்ந்த பொருட்கள் மன அழுத்தத்தைக் குறைத்து தூக்கத்தை வரவழைக்கும்.
பச்சை இலை காய்கறிகள்
பச்சை இலை காய்கறிகளில் ஃபோலேட் சத்து நிறைந்து காணப்படுகிறது. இது நியூரோ ட்ரான்ஸ்மிட்டர் உற்பத்திக்கு ஆதரவு தருகிறது. இதன் மூலம் கவலை உணர்வு, பதட்டம் போன்றவற்றை கட்டுப்படுத்தலாம்.
முட்டை
முட்டைகள் டிரிப்டோபேன் செரட்டோனின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது மனநிலையை மேம்படுத்த உதவுகிறது.
முந்திரி
முந்திரியில் 14 - 20 சதவீதம் ஜிங்க் உள்ளது. இது பதட்டத்தைக் குறைக்கும்.
பெர்ரி பழங்கள்
பெர்ரி பழங்களில் இருக்கும் ஆன்டி ஆக்சிடன்கள் செல் சேதத்தைத் தவிர்த்து மன அழுத்தத்தைப் போக்கும்.
அவகேடோ
நார்ச்சத்து, கொழுப்பு, விட்டமின் சி, பி6 போன்றவை அவகேடோவில் அதிகளவில் உள்ளன. இவை மன அழுத்தத்தைக் குறைத்து இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவும்.
சால்மன் மீன்
சால்மன் மற்றும் மத்தி மீன்களில் விட்டமின் டி சத்து அதிகம் உள்ளது. இது பதட்டம் போன்ற மனநிலை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் அளிக்கும்.