2 ஆவது சீன உளவுக் கப்பல் இந்தியாவின் கொல்லைப்புறத்தில்: சந்தேகத்தில் புதுடில்லி

OruvanOruvan

Chinese research vessel Xiang Yang Hong 3

சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல் ஒன்று இந்தியாவின் கிழக்குக் கடற்பரப்பினூடாக பயணித்து, தற்சமயம் சர்வதேச கடல் பகுதியில் நங்கூரமிடப்பட்டுள்ளது.

ஒடிசா கடற்கரை பகுதியில் ஏவுகணைச் சோதனை நடைபெறவுள்ளதாக இந்தியா எச்சரிக்கை விடுத்த சில நாட்களுக்குள் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

சீனக் கப்பலான சியாங் யாங் ஹாங் 01 (Xian Yang Hong 01) தற்சமயம் விசாகப்பட்டினம் கடற்கரையிலிருந்து 260 கடல் மைல்கள் - சுமார் 480 கிலோமீட்டர் தொலைவில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்செயலாக, இந்தியா தனது மூன்று அணுசக்தியால் இயங்கும் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்களை அங்கு வைத்துள்ளது, அவை நாட்டின் மிக முக்கியமான ஆயுதங்களில் ஒன்றாகும்.

OruvanOruvan

File Photo - NDTV

இந்தியாவின் எச்சரிக்கை

நீர்மூழ்கிக் கப்பலை ஏவுவதற்காக, அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் ஏவுகணையான K-4 ஐ ஏவுவதற்கு இந்தியா தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியதுடன், ஏவுகணையும் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (DRDO) இரண்டு தொன் எடையுள்ள போர்க்கப்பல்களை சுமந்து செல்லும் ஏவுகணையை உருவாக்கியது.

சோதனைக்கு முன்னதாக கடந்த வாரம் இந்தியா, குறித்த சோதனையை முன்னிட்டு வங்காள விரிகுடா பகுதியில் மார்ச் 11 மற்றும் 16 வரை எந்த விமானமும் பறக்கக்கூடாது என்று எச்சரித்து இருந்தது.

சுமார் 3,500 கிலோமீட்டர்கள் வரை இந்த தடை விதிக்கப்பட்டு இருந்தது.

சந்தேகத்தை எழுப்பியுள்ள சியாங் யாங் ஹாங் 01

இந்த எச்சரிக்கைகளுக்கு மத்தியில் கிழக்கு கடற்பகுதியில் ஏவுகணை சோதனைகள் உட்பட இந்தியாவின் செயல்பாடுகளை சீனா கண்காணித்து வருகிறது.

எனவே, 4,813 தொன் எடையுள்ள ஆராய்ச்சிக் கப்பலான சியாங் யாங் ஹாங் 01 இன் நிலை மற்றும் நேரம் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இந்த கப்பல் மார்ச் 6 ஆம் திகதி மலாக்கா நீரிணையில் நுழைந்து, மார்ச் 8 ஆம் திகதி கிரேட் நிக்கோபார் தீவுக்கும் இந்திய தீபகற்பத்திற்கும் இடையில் காணப்பட்டது.

பின்னர் 3 நாட்களில் மெல்ல அப்படியே வங்காள விரிகுடாவில் சோதனை செய்யும் இடத்திற்கு அருகே வந்துள்ளது.

OruvanOruvan

Xiang Yang Hong 01

ஒரேநேரத்தில் 15,000 கடல் மைல் தூரம் செல்லும் திறன்

2016 இல் சேவைக்கு வந்த சீனாவின் இந்த ஆராய்ச்சி கப்பல் 100 மீட்டர் நீளம் கொண்டது. இதனால் ஒரே நேரத்தில் 15,000 கடல் மைல் தூரம் செல்ல முடியும். 10,000 மீட்டர் ஆழம் வரை ஆய்வு செய்யக்கூடிய ரிமோட் சென்சிங் கருவிகளை இந்த சீன ஆய்வு கப்பல் கொண்டுள்ளது என்று அறிக்கைகள் கூறுகின்றன.

இந்த கப்பலில் அதிநவீன ஒலியைக் கண்டறியும் சென்சார்கள் இருக்கிறது. அதாவது நீர்மூழ்கிக் கப்பல்கள் ஏற்படுத்தும் சிறு ஒலியைக் கூட இது உணரலாம்.

மேலும் இது நீர்மூழ்கிக் கப்பல்களின் ஒலியியல் தடம் மற்றும் நீருக்கடியில் ஏவுகணை லான்ச் உள்ளிட்டவற்றையும் கண்டறியும் திறன் கொண்டது. இது உளவுத் தகவலாகும் பயன்படும் என்றும் கூறப்படுகிறது.

கப்பல் தற்சமயம் கண்காணிப்பில் உள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. தற்சமயம் வங்காள விரிகுடாவில் உள்ள பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே கப்பல் இயங்குகிறது என்றும் அது கூறியுள்ளது.

சியாங் யாங் ஹாங் 3 கப்பல்

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக டில்லியின் எச்சரிக்கையினை மீறி மற்றொரு சீனக் கப்பலான சியாங் யாங் ஹாங் 3 மாலைத்தீவின் ஒத்துழைப்புடன் இந்திய பெருங்கடலில் ஆய்வு பணியில் ஈடுபட்டது.

சியாங் யாங் ஹொங் 03 கப்பல் தற்போது இலங்கையின் ஆட்சேபனைகளிலிருந்து விலகி, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை ஆய்வு செய்து வருகிறது,

இது கடந்த மாதம் மாலைத்தீவில் நிறுத்தப்பட்டது.

மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸு இந்திய படையினர் வெளியேறுமாறு கேட்டுக்கொண்டதையடுத்து, புது டெல்லிக்கும் மாலேவுக்கும் இடையிலான உறவுகள் விரிசலுக்கு மத்தியில் இந்த கப்பலின் பயணம் அமைந்தது.

OruvanOruvan

Xiang Yang Hong 03