சென்னை-பெங்களூரு புதிய புகையிரத சேவை: பிரதமர் மோடி அங்குரார்ப்பணம்
![Oruvan](https://gumlet.assettype.com/oruvan/2024-03/d10d0c63-8299-4952-998a-389cad810bbf/vandebharat.webp?format=webp&w=800&q=70)
![Oruvan](/site-related-assets/no-image.webp)
vantebharat
சென்னை-பெங்களூரு இடையில் மேலும் ஒரு புகையிரதத்தை சேவையில் ஈடுபடுத்த தீர்மானத்துள்ளதாக இந்திய புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்திய மாநிலங்களை இணைக்கும் வந்தே பாரத் புகையிரத சேவை காணப்படுகின்றது.அந்தவகையில் பயணிகளின் நலன்கருதி மேலும் ஒரு புகையிரத்தினை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சென்னை-பெங்களூரு இடையே உள்ள 362 கிலோமீற்றர் தூரத்தினை வந்தே பாரத் புகையிரதம் சுமார் 4 மணி நேரம் 20 நிமிடங்களில் பயணிக்கின்றது.
அந்த வகையில் புதிய வந்தே பாரத் புகையிரத சேவை எதிர்வரும் 12 ஆம் திகதி பிரதமர் மோடியினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.