வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் மகோற்சவ காலம் ஆரம்பம்: மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் மகோற்சவ காலங்களில் தினமும் அன்னதானம் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொழும்பு - வெள்ளவத்தை,மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த ஆடிப்பூர மகோற்சவம் கடந்த சனிக்கிழமை ஆரம்பமாகியுள்ளது.
இந்த ஆடிப்பூர மகோற்சவ காலத்தின் உற்சவங்களாக எதிர்வரும் 22ஆம் திகதி சனிக்கிழமை காலை 7 மணிக்கு பால்குட பவனி, 29ஆம் திகதி சனிக்கிழமை காலை 7 மணிக்கு பஞ்சரத பவனியும் இடம்பெறவுள்ளது.
மேலும், 30ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு தீர்த்தோற்சவம், அன்றைய தினம் மாலை 6 மணிக்கு இந்திர விமான பவனி, 31ம் திகதி திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு பூங்காவனம் ஆகிய பிரதான நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
இதேவேளை, மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் மகோற்சவ காலங்களில் தினமும் அன்னதானம் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.