வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் மகோற்சவ காலம் ஆரம்பம்: மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் மகோற்சவ காலங்களில் தினமும் அன்னதானம் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

OruvanOruvan

Mayurapathy Sri Bathrakali Amman Kovil

கொழும்பு - வெள்ளவத்தை,மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த ஆடிப்பூர மகோற்சவம் கடந்த சனிக்கிழமை ஆரம்பமாகியுள்ளது.

இந்த ஆடிப்பூர மகோற்சவ காலத்தின் உற்சவங்களாக எதிர்வரும் 22ஆம் திகதி சனிக்கிழமை காலை 7 மணிக்கு பால்குட பவனி, 29ஆம் திகதி சனிக்கிழமை காலை 7 மணிக்கு பஞ்சரத பவனியும் இடம்பெறவுள்ளது.

மேலும், 30ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு தீர்த்தோற்சவம், அன்றைய தினம் மாலை 6 மணிக்கு இந்திர விமான பவனி, 31ம் திகதி திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு பூங்காவனம் ஆகிய பிரதான நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இதேவேளை, மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் மகோற்சவ காலங்களில் தினமும் அன்னதானம் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

OruvanOruvan

Mayurapathy Sri Bathrakali Amman Kovil

OruvanOruvan

Mayurapathy Sri Bathrakali Amman Kovil

OruvanOruvan

Mayurapathy Sri Bathrakali Amman Kovil

OruvanOruvan

Mayurapathy Sri Bathrakali Amman Kovil