சென்னை வெள்ளம்: 200 குடும்பங்களுக்கு நிதியுதவி: 200 குடும்பங்களுக்கு 2 லட்ச ரூபாயை நடிகர் பாலா வழங்கியுள்ளார்.
மிச்சாங் புயல் காரணமாக சென்னை மாநகரம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளும், நிவாரண பணிகளும் முழு வீச்சில் தொடர்ந்து நடந்து வருகின்றன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவி வரும் நிலையில் சின்னத்திரை நடிகர் பாலா, சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ.1000 வழங்கியுள்ளார்.
அந்த வகையில், 200 குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் பாலா வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ”2015 வெள்ளத்தின்போதே உதவி செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அப்போது காசு இல்லை. இப்போது என்னிடம் ரூ.2.25 லட்சம் இருந்தது.
என்னுடைய சொந்த தேவை மற்றும் வீட்டு வாடகை கொடுப்பதற்காக ரூ.25 ஆயிரம் எடுத்துக் கொண்டு 2 லட்சத்தை மக்களுக்கு கொடுத்து விட்டேன்.
வந்தாரை வாழவைக்கும் சென்னை, என்னையும் வாழவைத்தது. நம்மை பார்த்துக் கொள்வது சென்னைதான். அதனால் நம்மால் முடிந்ததைச் செய்து இந்த ஊரை பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை” என கூறியுள்ளார்.