காவல் நிலையம் சென்ற நடிகர் ராம்கி! பரபரப்பு புகார்: தமிழ் திரையுலகில் ஒரு சமயத்தில் முன்னணி நாயகனாக இருந்து தற்போது குணச்சித்திர வேடங்களில் நடிப்பவர் ராம்கி.

OruvanOruvan

Ramki and Nirosha

தனது வீட்டில் வைத்திருந்த அசல் சொத்து ஆவணங்கள் காணவில்லை என நடிகர் ராம்கி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்தவர் ராம்கி.

இவர் இணைந்த கைகள், இரட்டை ரோஜா, வனஜா கிரிஜா, பாளையத்து அம்மன் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகை நிரோஷா இவரின் மனைவி என்பது பலரும் அறிந்ததே.

OruvanOruvan

Ramki

ராம்கி சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இவர் நேற்று தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், "சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் ஜெமினி பார்சன் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறேன்.

கடந்த ஆகஸ்ட் மாதம் வீட்டில் அசல் ஆவணங்களை வைத்திருந்தேன். அண்மையில் அவற்றை தேடிய போது அவை கிடைக்கவில்லை.

இதை கண்டுபிடித்து தாருங்கள்" என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.