தனது இருக்கையில் மாணவியை அமர செய்து எழுந்து நின்ற நடிகர் சூர்யா: கல்வி மூலமாக வாழ்க்கையை படியுங்கள், வாழ்க்கை மூலமாக கல்வியை படியுங்கள் - சூர்யா

OruvanOruvan

Suriya Photo Credit: Twitter

சென்னையில் அகரம் அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு உரையாற்றினார்.

அகரம் என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை சூர்யா மற்றும் அவரின் குடும்பத்தார் நடத்தி வருகின்றனர்.

இதன்மூலம் ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்விக்கான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அகரம் மற்றும் சிவக்குமார் அறக்கட்டளை சார்பில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிவக்குமார், சூர்யா மற்றும் கார்த்தி கலந்து கொண்டனர்.

Photo Credit: TwitterPhoto Credit: Twitter

Suriya with Students Photo Credit: Twitter

நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் தலை வணங்குகிறேன். மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பது எவ்வளவு கஷ்டம் என்பது தெரியும்.

அனைவருக்கும் சமமான கல்வி வழங்க அகரம் அறக்கட்டகளை முயற்சி எடுத்து வருகிறது. இது போன்ற கல்வி உதவித்தொகை பெறும் நிகழ்வால் தான் வாழ்க்கை முழுமையடைகிறது.

கல்வி மூலமாக வாழ்க்கையை படியுங்கள், வாழ்க்கை மூலமாக கல்வியை படியுங்கள் என பேசினார்.

நிகழ்ச்சியின் போது தனது இருக்கையில் மாணவியை அமரவைத்து பின்னால் சென்று நடிகர் சூர்யா நின்று கொண்டது அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்தது.