திடீரென மொட்டையடித்துக் கொண்ட பேராண்மை பட நடிகை: இரசிகர்கள் அதிர்ச்சி
![Oruvan](https://gumlet.assettype.com/oruvan/2024-06/777a43cc-1f40-453a-b84e-19c1cf4fdd47/peranmai220909_19.jpg?format=webp&w=800&q=70)
![Oruvan](/site-related-assets/no-image.webp)
Peranmai actress
பரத், சந்தியா நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காதல்.
அத் திரைப்படத்தில் சந்தியாவுக்கு தோழியாக நடித்து பிரபலமானவர் நடிகை சரண்யா.
இதனைத் தொடர்ந்து 2009ஆம் ஆண்டு ஜெயம்ரவியுடன் பேராண்மை திரைப்படத்திலும் ஐந்து பெண்களில் ஒருவராக நடித்திருந்தார்.
தற்போது நடிப்பை விட்டுவிட்டு எடிட்டிங் ஸ்டூடியோ நடத்தி வருகிறார்.
இந்நிலையில், சரண்யா திருத்தணி, முருகன் கோயிலில் முடிக் காணிக்கை செலுத்தியுள்ளார்.
அதுமட்டுமின்றி முருகனை வேண்டி நாக்கில் அலகு குத்தியும் இருக்கிறார்.
இதுகுறித்த படங்களை வெளியிட்ட அவர், 'என்னையே தந்துவிட்டேன் கந்தனிடமே...அவன் என்ன செய்தாலும் எனக்கு சம்மதமே' என்றும் பதிவிட்டுள்ளார்.