அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போன நடிகை: வியப்பில் ரசிகர்கள்
நடிகை ரவுளி தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து பிரபலமடைந்தவர். இவரது தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் ஆள் அடையாளமே தெரியாமல் இவர் மாறியிருப்பதை பலரும் பார்த்து வியப்பில் உள்ளனர்.
கரிசக்காட்டு பூவே, திருமூர்த்தி ஆகிய படங்கள் தமிழில் இவருக்கு நல்ல பிரபலத்தைக் கொடுத்தது.
கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
திருமணத்திற்குப் பின்பும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த இவர், 2011 ஆம் வருடத்தின் பின் தெலுங்கிலும் நடிப்பதை நிறுத்தி குடும்பத்தை கவனிக்கத் தொடங்கிவிட்டார்.
அதன் பின்னர் ஒரு சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் இவர் நடிப்பதை விரும்பவில்லை என கூறப்படுகிறது.