அடுத்தப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த நடிகர் சூரி: புகைப்படங்களை வெளியிட்ட சமுத்திரகனி

OruvanOruvan

Actor Soori

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இயக்குநர் வெற்றிமாறன் கதை எழுத, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

மேலும், ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் கும்பகோணத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.

நடிகர் சமுத்திரகனி, "துரைசெந்தில்குமார் இயக்கத்தில் தம்பி சூரி கதைநாயகனாக நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு" என்று குறிப்பிட்டு இது தொடர்பான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.