மகள் வரலட்சுமியின் திருமணம் - முதல் முறை மனம் திறந்த சரத்குமார்: தன்னுடைய வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்துவிட்டேன் என வரலட்சுமி வந்து என்னிடம் கூறும்போது அவருக்கு திருமணம் செய்துவைப்பேன்.
நடிகர் சரத்குமார் முதன் முறையான தனது மகள் வரலட்சுமியின் திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
நடிகை வரலட்சுமி நடிப்பில் கொன்றால் பாவம் என்கிற திரைப்படம் மார்ச் 10ம் திகதி வெளியாகவுள்ளது.
இப்படத்தின் விழா அண்மையில் நடைபெற்றது.
இதில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வரலட்சுமியின் தந்தை சரத்குமாரிடம் அவரது மகளின் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த சரத்குமார்,
அது வரலட்சுமியுடைய விருப்பம். நான் யாரையும் கட்டாயப்படுத்த மாட்டேன்.
தன்னுடைய வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்துவிட்டேன் என வரலட்சுமி வந்து என்னிடம் கூறும்போது அவருக்கு திருமணம் செய்துவைப்பேன்” என தெரிவித்துள்ளார்.